தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகப் பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை: உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

2 mins read
65ea9f6e-15e4-4744-8a8e-d4d4b20cde47
-

சென்னை: தமி­ழ­கப் பள்­ளி­களில் நிக­ழும் பாலி­யல் தொல்லை உள்­ளிட்ட சம்­ப­வங்­கள் அதிர்ச்சி அளிப்­ப­தாக சென்னை உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இது­போன்ற செயல்­பா­டு­களை நீதி­மன்­றம் பொறுத்­துக்கொள்­ளாது என்­றும் கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால், பாலி­யல் தொல்லை தரு­வோர் தப்பி வரு­கின்­ற­னர் என்­றும் நீதி­பதி குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், நீதியை நிலை­நாட்ட நீதி­மன்­றம் எந்த எல்­லைக்­கும் செல்­லும் என்­றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

மது­ரை­யில் உள்ள ஜெயா ஆரம்பப் பள்­ளி­யில் பணி­யாற்றி வந்த இரு ஆசி­ரி­யை­கள் வேறு பள்­ளி­க­ளுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதை­ய­டுத்து அந்­தப் பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­யர் ஜோசப் ஜெய­சீ­லன், இந்­தப் பணி­யிட மாற்­றல் உத்­த­ர­வுக்­குத் தடை­விதிக்கக் கோரி உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

இந்த மனுவை விசா­ரித்த நீதி­பதி எஸ்.எம்.சுப்­பி­ர­ம­ணி­யம், மனு­தா­ர­ரான பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் மீது அப்­பள்­ளி­யில் நிய­மனம் செய்­யப்­படும் ஆசி­ரி­யை­கள் பெரும்­பா­லா­னோர் பாலி­யல் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருப்­ப­தாக அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

மேலும், தற்­போது பாதிக்­கப்­பட்­டுள்ள இரு ஆசி­ரி­யை­க­ளுக்­கும் மனு­தா­ரர் தொடர்ந்து பாலி­யல் தொல்லை அளித்­த­தாக அவர்­கள் புகார் அளித்­த­னர் என்­றும் அதன்­அ­டிப்­ப­டை­யில் இட­மா­று­தல் செய்­யப்­பட்­ட­தாக அர­சுத்­த­ரப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் நீதி­பதி தெரி­வித்­தார்.

"கல்வி நிறு­வ­னங்­களில் இருந்து தொடர்ந்து பாலி­யல் குற்­றச்­சாட்­டு­கள் வரு­வது அதிர்ச்சி அளிக்­கிறது. இவ்­வ­ழக்­கில் மனு­தா­ர­ரால் பாதிக்­கப்­பட்ட இரு பெண் ஆசி­ரி­யை­களும் கல்­வித்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பிய புகார் அடிப்­ப­டை­யில், கீரைத்­துறை காவல்­து­றை­யி­னர் மனு­தா­ரர் மீது வழக்­குப் பதிவு செய்து உட­ன­டி­யாக விசா­ர­ணை­யைத் தொடங்க வேண்­டும்.

"ஆசி­ரி­யை­கள் இரு­வ­ரும் இட­மா­று­தல் செய்­யப்­பட்ட பள்­ளி­யில் பணி­யில் சேர வேண்­டும். அவர் அளித்­துள்ள பாலி­யல் தொல்லை தொடர்­பான புகார்­களை விசா­ரிக்க, மாவட்ட கல்வி அலு­வ­லர் தனிக் குழுவை அமைக்க வேண்­டும்," என்று உயர் நீதி­மன்ற நீதி­பதி அதி­ரடி உத்­த­ர­வைப் பிறப்­பித்­தார்.