தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

1 mins read
cc88972f-0f34-49cf-af7e-96536d74d13b
கைது செய்யப் பட்டபோதுகட்சித் தொண்டர் களை நோக்கி கை அசைத்தார் ஜெயக்குமார்.படம்: ஊடகம் -

சென்னை: நில அப­க­ரிப்பு தொடர்­பான அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மா­ருக்கு உயர் நீதி­மன்­றம் பிணை வழங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது.

அவர் மீது போடப்­பட்ட மூன்று வழக்­கு­களில் ஏற்­கெ­னவே இரண்டு வழக்­கு­களில் அவர் பிணை பெற்­றுள்­ளதை அடுத்து, சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஜெயக்­கு­மார், திமுக அரசு வேண்­டும் என்றே தம் மீது பொய் வழக்­கு­க­ளைத் தொடுத்­துள்­ள­தா­கச் சாடி­னார்.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லின் போது கள்ள வாக்­கு­க­ளைச் செலுத்த முயன்ற திமு­க­வி­ன­ரைத் தடுத்­த­தால் தாம் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஹிட்­ல­ரின் மறு உரு­வம்­தான் முதல்­வர் ஸ்டா­லின். ஆயி­ரம் ஸ்டா­லின்­கள் வந்­தா­லும் அதி­மு­கவை அழிக்க முடி­யாது.

"முன்­னாள் அமைச்­சர்­கள் மீது மட்­டுமே திமுக அரசு கவ­னம் செலுத்­து­கிறது. திமுக அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்று மக்­க­ளுக்கு நல்­லது எது­வும் செய்­ய­வில்லை," என்­றார் ஜெயக்­கு­மார்.

உள்­ளாட்­சித் தேர்­தல் வாக்­குப்­பதி­வின்­போது திமுக உறுப்­பி­னரைத் தாக்­கி­யது தொடர்­பாக ஜெயக்­குமார் மீது பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதி­வா­னது. பி்ன்னர் காவல்­துறை அனு­மதி இன்றி சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தாக இரண்­டா­வது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது.

இவ்­விரு வழக்­கு­கள் தொடர்­பில் நீதி­மன்­றம் மூலம் பிணை பெற்­றுள்­ளார் ஜெயக்­கு­மார். இந்­நிலை­யில் நில அப­க­ரிப்பு வழக்­கி­லும் அவ­ருக்கு நீதி­மன்­றம் பிணை வழங்­கி­யுள்­ளது.