'ஏழைகளுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித்தர வேண்டும்'

'ஏழைகளுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித்தர வேண்டும்'

2 mins read
9ea56506-e8bb-45d9-9ce8-a660db39c78a
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

முப்பதாவது கட்டுநர்கள் சங்க மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுநர்கள் தமிழக அரசுக்கு தூண்கள் போல துணை நிற்க வேண்டும் என்றும் 30ஆவது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் கட்டடங்களை தரமாகவும் வலிமை மிக்கதாகவும் கட்டிக்கொடுத்து அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார் முதல்வர்.

"வழக்கமாக, ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள். நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

"கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்த கட்டுமான தொழில் சந்தித்து வருகிறது என்பது இந்த அரசுக்கு நன்றாகவே தெரியும்.

"அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி நடைமுறை ரத்து செய்யப்பட்டது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கட்­டு­­நர் சங்­கத்­தின் சென்னை மையம் மட்­டுமே இரு­நூ­றா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட அமைப்பு சாராத் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பணி­யா­ளர்­க­ளுக்­கும் வேலை­வாய்ப்பு வழங்­கும் மைய­மாக விளங்­கு­கிறது என்று குறிப்­பிட்ட அவர், கொரோனா நெருக்­கடி காலத்­தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ரேசன் பொருட்­கள் வழங்­கு­தல் உள்­ளிட்ட பல்­வேறு நலத்­திட்­டங்­களை அம்மை­யம் செய்­தி­ருப்­பது மிகுந்த பாராட்­டுக்­கு­ரி­யது என்­றார்.

"சொன்­னதை மட்­டு­மல்ல, செய்­வதை மட்­டு­மல்ல, சொல்­லா­த­தை­யும் செய்­யக்­கூ­டிய ஆட்­சி­தான் இந்த ஆட்சி. ஏனென்­றால் தாய் எட்­டடி பாய்ந்­தால், குட்டி பதி­னாறு அடி பாயும் என்­பார்­கள். ஆனால் பதி­னாறு அடி பாய்ந்­தால் அது எங்­கள் தலை­வ­ருக்கு (கரு­ணா­நிதி) பெருமை அல்ல, 32 அடி பாய­வேண்­டும். அது தான் நாங்­கள் அவ­ருக்கு தரும் பெருமை," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், தமி­ழர்­கள் எங்­கி­ருந்­தா­லும் அவர்­களை காப்­பாற்­றும் இயக்­கம் திமுக என்­றார்.

தமி­ழர் என்­றால் ஒரு உணர்வு வரும் என­வும் அது உள்­ளூர் தமிழர் என்­றா­லும் சரி உக்­ரேனில் இருந்­தா­லும் சரி என­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"நாட்­டில் வேறு எந்த மாநி­ல­மும் செய்­தி­ராத வகை­யில், தமிழ்­நாட்­டில் மட்­டும் தான் மீட்பு குழு அமைத்து உக்ரே­னில் இ­ருந்து மாண­வர்­களும் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தமிழர்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

"உல­கின் எந்த மூலை­யில் உள்ள தமி­ழர்­கள் என்­றா­லும் அவர்­க­ளைக் காப்­பாற்ற திமுக இயக்­கம் நட­வ­டிக்கை எடுக்­கும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.