தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தமிழக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது'

2 mins read
57e24ed8-7dde-4b86-9d28-4a3cd8eb16d3
-

சென்னை: ஹைட்­ரோ­கார்­பன், மீத்­தேன், ஷேல் என்ற பாறை எரி­வாயு போன்ற நாச­க­ர­மான திட்­டங்­க­ளைத் தமி­ழ­கத்­தின் மீது ஒன்­றிய அரசு திணித்­து­வ­ரு­வது கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என மனி­த­நேய மக்­கள் கட்சி தலை­வர் எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா கூறி­யுள்­ளார்.

இது­போன்ற அபா­ய­க­ர­மான திட்­டங்­க­ளால் விவ­சாய நிலங்­கள் முற்­றி­லும் பாதிக்­கப்­பட்டு, சுற்­றுச் சூழ­லுக்கு பெரும் தீங்கை விளை­விக்­கும் என்­றும் மண்ணை மல­டாக்கி, சுற்­றுச்­சூ­ழலை நாச­மாக்­கும் என்­றும் அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இது­போன்ற திட்­டங்­களை எதிர்த்து தமி­ழக மக்­கள் போராடி ­வ­ரும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் ஒன்­பது இடங்­களில் ஹைட்­ரோ­கார்பன் திட்­டத்­திற்­கு அனு­மதி கோரி 'ஓஎன்ஜிசி' நிறு­வ­னம் மத்­திய அர­சி­டம் கோரிக்கை வைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தமி­ழ­கத்­தின் எந்­தப் பகு­தி­யி­லும் ஹைட்­ரோ­கார்­பன் கிண­று­கள் அமைக்க அனு­மதி அளிக்க மாட்­டோம் என முதல்­வர் ஸ்டா­லின் கூறி­யுள்­ள­தைச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"காவிரி டெல்டா பகுதி, பாது­காக்­கப்­பட்ட வேளாண் மண்­ட­ல­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மத்­திய சுற்­றுச்­சூ­ழல் அமைச்­ச­கம் தமிழ்­நாட்­டில் ஹைட்­ரோ­கார்­பன் திட்­டத்­திற்கு பரிந்­துரை செய்­தி­ருப்­பது கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.

"மேலும் ஹைட்ரோ கார்­பன் திட்­டங்­க­ளால் ஏற்­படும் தாக்­கம் குறித்து ஆய்வு செய்ய, பேரா­சி­ரி­யர் சுல்­தான் அக­மது இஸ்­மா­யில் தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட குழு நான்கு மாத கள ஆய்­வின் 106 பக்­கங்­கள் கொண்ட அறிக்­கையை தமிழ்­நாடு அர­சி­டம் அளித்­துள்­ளது.

"அதில் ஹைட்­ரோ­கார்­பன் திட்­டத்­தால் காவிரிlg படுக்கை பகு­தி­யில் உள்ள நிலம், நீர், காற்­றில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள், அப்­ப­கு­தி­யில் வாழும் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் குறித்து அறி­வி­யல் ரீதி­யி­லான ஆதா­ரங்­க­ளு­டன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது," என்று ஜவாஹி­ருல்லா தமது அறிக்கையில் கூறி­யுள்­ளார்.