உக்ரேனில் இருந்து நாடு திரும்ப சாய் நிகேஷ் சம்மதம்

உக்ரேனில் இருந்து நாடு திரும்ப சாய் நிகேஷ் சம்மதம்

1 mins read
ae0bbfd9-27ab-4f3d-a57f-8743f4009705
-

கோவை: உக்­ரேன் துணை ராணு­வப் படை­யில் சேர்ந்து பணி­யாற்­றிய கோவை மாண­வர் சாய்­நி­கேஷ் நாடு திரும்ப சம்­ம­தித்­துள்­ள­தாக அவ­ரது பெற்­றோர் தெரி­வித்­த­னர்.

உக்­ரே­னில் விமா­ன­வி­யல் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள சென்ற சாய் நிகேஷ் இந்­திய ராணு­வத்­தில் சேர்ந்து பணி­யாற்ற விரும்­பி­யுள்­ளார். ஆனால், அவ­ரது உய­ரம் குறை­வாக இருந்­த­தால் அந்த விருப்­பம் நிறை­வே­ற­வில்லை.

இதை­ய­டுத்து, உக்­ரேன் சென்ற அவர், அந்­நாட்­டின் மீது ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தத் தொடங்­கி­ய­தும் அந்­நாட்­டின் துணை ராணு­வப் படை­யில் தன்னை இணைத்­துக்­கொண்­டார். இந்­நி­லை­யில் அவ­ரைப் பற்றி மத்­திய, மாநில அர­சு­க­ளின் உள­வுப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­வ­தாக தக­வல்­கள் வெளி­யா­கின.

இந்­நி­லை­யில், பெற்­றோ­ரைத் தொடர்­பு­கொண்ட சாய்­நி­கேஷை நாடு திரும்­பு­மாறு அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர். எனி­னும், ராணு­வத்­தில் பணி­யாற்ற வேண்­டும் என்ற தனது ஆசை நிறை­வே­றி­விட்­ட­தா­க­வும் நாடு திரும்ப விரும்­ப­வில்லை என்­றும் சாய்­நி­கேஷ் கூறி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், மக­னு­டன் சாய்­நிகேஷ் பெற்­றோர் தொடர்ந்து பேசி வந்­த­னர். ஒவ்­வொரு முறை­யும் நாடு திரும்­பு­மாறு பெற்­றோர் கெஞ்­சி­ய­தால் அவர் மனம் மாறி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து, அவர் நாடு திரும்ப சம்­ம­தித்­துள்­ள­தாக பெற்­றோர் தெரி­வித்­த­னர். இது­கு­றித்து இந்­திய வெளி­யு­றவு அமைச்­சி­டம் தக­வல் தெரி­வித்­தி­ருப்­ப­தா­க­வும் தங்­களை பொறுமை காக்­கு­மாறு அமைச்சு அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­தா­க­வும் சாய்­நி­கே­ஷின் பெற்­றோர் தெரி­வித்­துள்­ள­னர்.