திருச்சி: நிபந்தனை பிணையில் விடுதலையாகி உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் முன்னிலையாகி நேற்று கையெழுத்திட்டார்.
பொய்வழக்குப் போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது சாத்தியமில்லாதது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுக பிரமுகரைத் தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தி யது, நில அபகரிப்பு ஆகிய வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், திருச்சி காவல்நிலை யத்தில் கையொப்பமிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் அதிமுகவை அழிப்பது பற்றியே சிந்தனை செய்து கொண்டு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். "அதிமுகவை ஸ்டாலினால் ஒன்றும் செய்யமுடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது பூனை பகல் கனவு காண்பது போல்தான் இருக்கும்," எனக் கூறினார்.

