தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெப்பக்குளத்தில் கிடைத்த மூன்று சிலைகள்

1 mins read
8d2573a1-99d9-4020-b0dc-8b5a7d88e055
காணாமல் போனதாகக் கூறப்படும் மயில் சிலை. படம்: தமிழக தகவல் ஊடகம் -

சென்னை: மயி­லாப்­பூர் கபா­லீஸ்­வரர் கோவி­லின் தெப்­பக் குளத்­தில் இருந்து மூன்று சிலை­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இது­கு­றித்து காவல்­துறை தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

சென்னை மைலாப்­பூர் பகு­தி­யில் உள்­ளது பிர­சித்தி பெற்ற கபா­லீஸ்­வரர் திருக்­கோ­வில். இங்கு கடந்த 2004ஆம் ஆண்டு மயில் சிலை ஒன்று காணா­மல் போனது.

இது தொடர்­பாக வழக்­குப் பதிவு செய்த சிலைக்­க­டத்­தல் தடுப்­புப் பிரிவு காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை நடத்தி வந்­த­னர். எனி­னும் இது­வரை எந்­த­வொரு முன்­னேற்­ற­மும் இல்லை.

இந்­நி­லை­யில், காணா­மல் போன சிலை­கள் கோவி­லின் தெப்­பக்­கு­ளத்­தில் இருப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

திங்­கட்­கி­ழமை காலை தெப்­பக் குளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தல் நட­வ­டிக்­கை­யின்­போது மூன்று சிறிய சிலை­கள் கிடைத்­துள்­ளன.

தேடு­தல் பணி­யில் ஆறு படகு­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. பயிற்சி பெற்ற தீய­ணைப்பு வீரர்­கள் சிலை­களைத் தேடி­னர்.

இது­வரை மயில் சிலை கிடைக்க­வில்லை என்­றும் தேடு­தல் நட­வ­டிக்கை நீடிப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே கபா­லீஸ்­வ­ரர் கோவி­லில் நேற்று தேரோட்­டம் நடை­பெற்­றது. இதில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்­ட­னர்.