முதல்வர்: எதிலும் முதல் நிலை என்பதே அரசின் இலக்கு

முதல்வர்: எதிலும் முதல் நிலை என்பதே அரசின் இலக்கு

1 mins read
3b4f0ca6-dc2c-4eae-b98f-61c71aacec3e
-

சென்னை: இந்­திய அள­வில் மின்­ன­ணு­வி­யல் சார்ந்த உற்­பத்­தி­யில், தமிழ்­நாட்­டின் பங்­க­ளிப்பு 20 விழுக்­கா­டாக உள்­ளது என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், எந்­தத் துறை­யாக இருந்­தா­லும் அதில் முன்­னணி வகிக்க வேண்­டும்; பின்­னர் முதல் நிலை என்ற அந்த இலக்கை நோக்கி பய­ணிக்க வேண்­டும் என்­ப­து­தான் தமி­ழக அர­சின் குறிக்­கோள் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

திருப்பெ­ரும்­பு­தூ­ரில் சாம்­சங் நிறு­வனம் ரூ.1,588 கோடி முத­லீட்­டில், 600 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் காற்­ற­ழுத்த கரு­வி­கள் உற்­பத்தித் திட்­டத்­தைச் செயல்­படுத்த உள்­ளது. அதற்­கான புரிந்­து­ணர்வு கையெ­ழுத்­தா­கியுள்ளது. இந்­நி­கழ்­வில் பேசும்­போதே முதல்­வர் ஸ்டா­லின் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

தமிழ்­நாட்­டில் உங்­கள் தயா­ரிப்பு வரி­சையைப் பல்­வ­கைப்­ப­டுத்தி, மேலும் விரி­வாக்­கம் செய்­யுங்­கள் என்று சாம்­சங் நிர்­வா­கத்தை தாம் கேட்­டுக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், கணினிச்சில்லு உற்­பத்­தித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களை முதலீடு செய்ய வைத்ததாகவும் அந்த நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்குத்தான் இப்போது தாம் அடிக்கல் நாட்டி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகளை வழங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு நன்றி," என்றார் முதல்வர் ஸ்டாலின்.