3,500 ஆண்டுகளுக்கு முந்திய கற்குவைகள் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகளுக்கு முந்திய கற்குவைகள் கண்டுபிடிப்பு

1 mins read
8e768e96-505d-42e0-8af2-d465ede13b2b
-

சென்னை: திருப்­பத்­தூர் அருகே சுமார் 3,500 ஆண்­டு­க­ளுக்கு முந்­திய கற்­கு­வை­கள் கண்­டெடுக்­கப்பட்­டுள்­ளன.

பேரா­சி­ரி­யர் முனை­வர் ஆ.பிரபு தலை­மை­யி­லான ஆய்வு மாணவர்­கள் ஏல­கிரி மலை­யில் கள ஆய்வு மேற்­கொண்ட போது, மிகப்­பெ­ரிய ஈமக்­காடு ஒன்றை கண்டுபிடித்துள்­ள­னர் (படம்).

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய முனை­வர் ஆ.பிரபு, மலை­யின் பின்­புற சரி­வில் நீலிக்­கொல்லி என்ற பகுதி­யில் பதி­னைந்­துக்­கும் மேற்­பட்ட கற்கு­வை­கள் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

கற்­கு­வை­கள் என்­பன பெருங்­கற்­கால மக்­க­ளது ஈமச்சின்னங் கள் என்­றும் அந்­நாள்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்­கம் செய்­து­விட்டு அந்த இடத்தை அடை­யா­ளம் காண்­ப­தற்­காக பல்­வேறு அமைப்­பு­களை அங்கே ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருந்­த­தா­க­வும் அவர் விளக்­கி­னார்.

"அவற்றை கல்­வட்­டம், கற்­திட்டை, கற்­ப­துக்கை, நெடுங்­கல் எனக் குறிப்­பி­டு­வர். அந்த வரி­சை­யில் கற்­குவை என்­கிற அமைப்­பும் அடங்­கும்.

"அதா­வது, உயி­ரி­ழந்த ஒரு­வரை அக்­கால மக்­கள் அடை­யா­ளப்­ப­டுத்­தி­ இருந்­தனர். இப்­ப­டிப்­பட்ட கற்­கு­வை­கள் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் ஒரே இடத்­தில் பதி­னைந்­துக்­கும் மேற்­பட்­டவை கிடைத்­தி­ருப்­பது இதுவே முதன் முறை," என்­றார் முனைவர் ஆ.பிரபு.