உயர் நீதிமன்றம்: அரசு அலுவலகங்களில் கைபேசி பயன்படுத்துவது நடத்தை விதிமீறல்

உயர் நீதிமன்றம்: அரசு அலுவலகங்களில் கைபேசி பயன்படுத்துவது நடத்தை விதிமீறல்

2 mins read
b95aa815-0bff-4ec9-b61c-c3b7542f3dfd
-

மதுரை: அரசு அலு­வ­ல­கங்­களில் பணி நேரத்­தின்­போது அரசு ஊழி­யர்­கள் கைபே­சி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தும் காணொ­ளி­க­ளைப் பதிவு செய்­வது போன்ற நட­வ­டிக்­கை­களும் நடத்தை மீறல் ஆகும் என மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை தெரி­வித்­துள்­ளது.

அரசு அலு­வ­ல­கங்­களில் உள்ள ஊழி­யர்­கள் தனிப்­பட்ட காரணங்­க­ளுக்­காக கைபே­சி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கக்­கூ­டாது என்­றும் வழக்கு ஒன்றை விசா­ரித்த உயர் நீதி­மன்ற நீதி­பதி எஸ்.எம்.சுப்­பி­ர­ம­ணி­யம் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அரசு அலு­வ­ல­கங்­களில் உள்ள ஊழி­யர்­கள் கைபே­சி­யைப் பயன்­படுத்­து­வது இயல்­பான விஷ­ய­மாக மாறி­விட்ட நிலை­யில், இந்த நிலைமை மாற, அரசு ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்­தில் நுழை­யும்­போதே கைபே­சி­களை ஒரு பொது­வான இடத்­தில் வைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்­பதே நீதி­மன்றம் முன்­வைக்­கும் கருத்து என்று நீதி­பதி குறிப்­பிட்­டார்.

எனி­னும் அவ­சர நேரங்­களில் அதி­கா­ரி­க­ளின் அனு­ம­தி­யைப் பெற்று அலு­வ­ல­கத்­திற்கு வெளியே சென்று கைபே­சி­யில் பேச அனு­ம­திக்­க­லாம் என்­றும் பணி நேரத்­தின்­போது கைபே­சி­யில் பேசு­வது, அதன் படச்சாதனத்தைப் பயன்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட செயல்­பா­டு­களை ஒழுங்கு படுத்­த­வேண்­டும் என்­றும் நீதி­பதி கூறி­னார்.

"இது ­தொ­டர்­பாக அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் சுற்­ற­றிக்கை அனுப்ப வேண்­டும். அந்த உத்­த­ரவு, சுற்­ற­றிக்­கையை மீறும் அரசு ஊழி­யர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

"அரசு அலு­வ­ல­கங்­களில் பணி நேரத்­தில் கைபேசி, அவற்­றின் படச்சாதனத்தைப் பயன்­ப­டுத்­து­வதை வரை­மு­றைப்­ப­டுத்த வழி­காட்­டு­தல்­களை ஏற்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் நீதி­பதி எஸ்.எம்.சுப்­பி­ர­ம­ணி­யம்.

திருச்சி சுகா­தா­ரத்­துறை மண்­டல அலு­வ­ல­கத்­தில் கண்­காணிப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர் டி.எஸ்.ராதிகா.

இவர் அலு­வ­ல­கத்­தில் பணி நேரத்­தின்­போது கைபே­சி­யில் காணொ­ளி­கள் பதிவு செய்­வ­தா­கப் புகார் எழுந்­தது. இதை­ய­டுத்து அவ­ரி­டம் இருந்த கைபே­சி­யைப் பறி­மு­தல் செய்­­யு­மாறு உய­ர­தி­காரி உத்­த­ர­விட்­டார்.

இதை­ய­டுத்து அந்த அதி­கா­ரி­யை­யும் அலு­வ­ல­கக் காவ­ல­ரை­யும் ராதிகா தாக்­கி­னார். அதன் அடிப்­படை­யில் அவர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டார். இந்த உத்­த­ரவை ரத்து செய்­யக்­கோரி மதுரை உயர் நீதி­மன்­றக் கிளையை அணு­கினார் ராதிகா. அவ­ரது வழக்கை விசா­ரித்­த­போதே நீதி­பதி எஸ்.எம்.சுப்­பி­ர­ம­ணி­யம் மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­தார்.