'நானே ஜெயாவின் வாரிசு': மதுரை பெண்ணால் பரபரப்பு

'நானே ஜெயாவின் வாரிசு': மதுரை பெண்ணால் பரபரப்பு

1 mins read
4ffe8a5c-2362-40de-9ae4-cd0b65124c06
-

மதுரை: காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்கு தாமே வாரிசு என்­கி­றார் திரு­வள்­ளூ­ரைச் சேர்ந்த கூலித்­தொ­ழி­லா­ளி­யின் மனைவி மீனாட்சி (படம்).

38 வய­தான இவர், தமக்கு ஜெய­ல­லி­தா­வின் வாரிசு என்று குறிப்­பிட்டு சான்­றி­தழ் வழங்க வேண்டும் என இணை­யம் வழி கடந்த ஜன­வரி 27ஆம் தேதி மதுரை வடக்கு தாலுகா அலு­வ­ல­கத்­தில் விண்­ணப்­பித்­துள்­ளார்.

தனது தந்தை நடி­கர் ஷோபன் பாபு என்­றும் தாய் ஜெய­ல­லிதா என்­றும் குறிப்­பிட்­டுள்ள அவர், பெற்­றோரை இழந்­து­விட்­ட­தால் தமக்கு வாரிசு சான்­றி­தழ் வழங்க வேண்­டும் என்­றும் கோரு­கி­றார்.

மீனாட்­சி­யின் விண்­ணப்­பத்­துடன் அவ­ரைப் பற்­றிய ஆவ­ணங்­கள் மட்­டுமே இணைக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் அதி­கா­ரி­கள் குழப்­பம் அடைந்­துள்ள நிலை­யில், நேற்று முன்­தினம் வடக்கு தாலுகா அலு­வ­ல­கத்­துக்கு வந்த மீனாட்சி, தமக்குச் சான்­றி­தழ் வழங்க வேண்­டும் என அங்­கி­ருந்த துணை தாசில்­தா­ரி­டம் வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார்.

ஆனால், நீதி­மன்­றத்தை அணுகி, தாமே ஜெய­ல­லி­தா­வின் வாரிசு என உரிமை கோரி, அதற்­கான உத்­த­ர­வைப் பெற்று வரு­மாறு கூறி அவரை அனுப்பி வைத்­தார் துணை தாசில்­தார்.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கண்ணீர் மல்கப் பேசிய மீனாட்சி, அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்து தமது வழக்­க­றி­ஞ­ரி­டம் கலந்­தா­லோ­சிக்­கப் போவ­தாக தெரி­வித்­தார்.