சென்னையில் மாபெரும் 'செஸ்' போட்டி

சென்னையில் மாபெரும் 'செஸ்' போட்டி

2 mins read
fd72182f-c27f-4fb0-8c7c-019f5e9d36b7
-

ஏறக்குறைய 150 நாடுகள் பங்கேற்கும் இந்தியாவின் ஆகப்பெரிய விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது.

சென்னை: உலகம் முழுவதும் இருந்து பல நாடுகள் பங்கேற்கும் அனைத்துலக சதுரங்கக் கூட்டு அமைப்பின் 44வது 'செஸ்' ஒலிம் பியாட்' போட்டி சென்னையில் பிர பல சுற்றுலாத் தளமான மாமல்ல புரத்தில் நடைபெறுகிறது.

இதில் 150 நாடுகளைச் ேசர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் நடைெபறும் ஆகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக இது இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்ட அறிக்­கை­யில், 2022ஆம் ஆண்­டின் அனைத்­து­லக சது­ரங்கப் போட்­டியை சென்­னை­யில் நடத்­து­வ­தற்­கான ஏலத்­தில் இந்­தியா வெற்றி பெற்­றுள்­ளது என்­பதை அகில இந்­திய செஸ் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து தமிழக அரசு அறி­விப்­ப­தில் மகிழ்ச்சி அடை­கிறது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

போர் சூழ்­நிலை கார­ண­மாக 'செஸ் ஒலிம்­பி­யாட் 2022' போட்­டியை ரஷ்­யா­வில் நடத்த முடி­ய­வில்லை. இந்த நிலை­யில் இந்­தப் போட்­டியை நடத்த பல நாடு­கள் முன் வந்தன.

ஆனால் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முயற்­சி­யு­டன் தமி­ழக அர­சின் அனைத்து மட்ட அதி­கா­ரி­களும் அகில இந்­திய செஸ் கூட்­ட­மைப்­புக் குழு­வு­ம் இணைந்து செயல்பட்டு இந்த நிகழ்வு சென்­னை­யில் நடத்து­வ­தற்­கான வாய்ப்பு கைப் பற்றப்பட்டுள்ளது.

பத்து நாட்­க­ளுக்­குள் ஏலம் கோரு­வ­தற்­கான கோரிக்­கை­யு­டன் அகில இந்­திய செஸ் கூட்­ட­மைப்பு, முதல்­வர் அலு­வ­ல­கத்தை அணு­கிய சில மணி நேரங்­களில் அனைத்து ஒப்­பு­தல்­க­ளை­யும் தமி­ழக அரசு வழங்­கி­யது.

தமி­ழக அரசு, சது­ரங்க விளை­யாட்­டுப் போட்­டி­க­ளுக்­குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரு­கிறது.

இந்­தி­யா­வின் 73 கிராண்ட் மாஸ்­டர்­களில் பிரக்­ஞா­னந்தா, குகேஷ், அதி­பன், ஸ்ரீநாத் மற்­றும் உல­கப் புகழ்­பெற்ற விஸ்­வ­நா­தன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்­டர்­கள் தமி­ழ­கத்­திற்­குக் கிடைத்­து உள்­ள­னர்.

முதல்­வர் ஸ்டா­லின் தமது டுவிட்­டர் பதி­வில், "செஸ் ஒலிம்­பி­யாட் போட்­டி­கள் சென்­னை­யில் நடை­பெற இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது, 'செஸ் ஒலிம்­பி­யாட்' போட்டி­ யை ஏற்று நடத்­து­வ­தில் தமிழ்­நாடு பெருமை கொள்­கிறது," என்று தெரி­வித்­துள்­ளார்.