தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவி நிதி தமிழக வரவுசெலவுத் திட்டம் தாக்கல் முக்கிய அம்சங்கள்

3 mins read
0a202ad5-3124-4412-ad4b-54184d1cb152
-

சென்னை: தமி­ழக அர­சின் 2022-2023ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டம் சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று காலை 10 மணிக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

காகி­த­மற்ற வரவு செல­வுத் திட்ட அறிக்­கை­யைத் தாக்­கல் செய்த நிதி­ய­மைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், "பிணி­யின்மை செல்­வம் விளை­வின்­பம் ஏமம்

அணி­யென்ப நாட்­டிவ் வைந்து" என்ற திருக்­கு­றளை மேற்­கோள் காட்டி தனது உரை­யைத் தொடங்கினார்.

ஒவ்­வொரு துறை வாரி­யாக எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­பது குறித்து சுமார் 110 நிமி­டங்­கள் நின்­ற­ப­டியே விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

2014ஆம் ஆண்டு முதல் வரு வாய்ப் பற்­றாக்­குறை அச்­சு­றுத்­தும் வகை­யில் ஆண்­டு­தோ­றும் அதி கரித்து வந்­துள்­ளது. முதன்­மு­றை­யாக இவ்­வாண்­டில் இந்­நிலை மாற்­றப்­பட்டு 7,000 கோடி ரூபாய்க்­கும் மேல் வரு­வாய் பற்­றாக்­குறை குறைய உள்­ளது. இந்த சவா­லான ஆண்­டி­லும் நிதிப் பற்­றாக்­குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய உள்­ளது. இப்­போ­தைய அர­சின் தீர்க்­க­மான நட­வ­டிக்கைகளும் நிர்­வா­கத் திற­னுமே இதனை சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளது என்றார்.

இந்­நி­லை­யில், அதி­முக எம்­எல்­ஏக்­கள் அம­ளி­யில் ஈடு­ப­ட்டனர். பேர­வை­யில் பேச தனக்கு அனு­மதி அளிக்­கு­மாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி கோரி­னார்.

அப்­போது நிதி அமைச்­ச­ரின் உரை முடிந்­த­தும் பேச­லாம் என சபா­நா­ய­கர் மு.அப்­பாவு உறுதி கூறி­ய­போ­தும், அதி­முக எம்­எல்­ஏக்­கள் அம­ளி­யில் ஈடு­பட்டு, வெளி நடப்பு செய்­த­னர்.

ஏமாற்­றம் அளிக்­கும் 'பட்­ஜெட்'

"கல்­விக்­க­டன் தள்­ளு­படி செய்­யப்­ப­ட­வில்லை. மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம் நிறைவேற்­றப்­ப­ட­வில்லை. மக்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யுள்­ளது," என்று பழ­னிசாமி தெரி­வித்­துள்­ளார்.

"மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதில் காட்டும் வேகத்தை, திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு காட்டியிருக்கவேண்டும்," என்று இக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 பள்ளிக்கல்வித்துறைக்கு ஏறத் தாழ 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழ்­நாட்­டில் உயர்­கல்வி பயி­லும் அர­சுப் பள்ளி மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.1,000 உத­வித் தொகை­யாக வழங்­கப்­பட உள்­ளது. பட்­டப்­ப­டிப்பு, பட்­ட­யப்­ப­டிப்பு, தொழிற்­ப­டிப்பு ஆகி­ய­ படிப்புகளை மாணவிகள் படித்து முடிக்­கும் வரை மாதம் ரூ.1,000 அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் வரவு வைக்­கப்­படும்.

 'ஸ்மார்ட்' வகுப்­ப­றை­கள், கணினி வகுப்­பு­கள் என பள்ளி களின் உள்­கட்­ட­மைப்பை மேம்­படுத்த ரூ.1,300 கோடி செலவு செய்­யப்­படும்.

 சென்­னை­யில் வெள்­ளத் தடுப்புப் பணி­க­ளுக்குச் சிறப்புக் குழு நிர்­ண­யிக்­கப்­பட்­டு, முதல்­கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

 வானிலை ஆய்வு மையத்தை தொழில்­நுட்ப ரீதி­யாக மேம்­ப­டுத்­தும் பணி­க­ளுக்கு ரூ.10 கோடி ஒதுக்­கப்­படும்.

 தந்தை பெரி­யா­ரின் சிந்­த­னை­கள் அடங்­கிய தொகுப்பு ரூ.5 கோடி செல­வில் 21 மொழி­களில் அச்­சி­டப்­படும்.

 காவல்­து­றைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

 ஓய்­வூ­தி­ய­தா­ரர்­க­ளுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

 தீய­ணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்­கீடு.

 வேளாண் கூட்­டு­றவு சங்­கங்­களில் வழங்­கப்­பட்ட தங்க நகைக் கடன் தள்­ளு­ப­டிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

 மக­ளிர் சுய உத­விக் குழு கடன் தள்­ளு­ப­டிக்கு ரூ.500 கோடி, வட்­டி­யில்லா பயிர்க் கடன் திட்­டத்­துக்கு ரூ.200 கோடி ஒதுக்­கப்­படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டத்தை முதல் ஆண்டில் செயல்படுத்த முடியவில்லை. தமிழக நிதி நிலைமை சீரடைந்த பின்னர் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நிதி­ய­மைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்