மாற்றுத் திறனாளி ஆடவரைத் தாக்கிய மூன்று காவலர்கள் இடைநீக்கம்

மாற்றுத் திறனாளி ஆடவரைத் தாக்கிய மூன்று காவலர்கள் இடைநீக்கம்

1 mins read
022364dc-821f-4233-aac3-154b2901dbe2
-

புதுக்­கோட்டை: பார்­வை­யற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளியை அடித்துக் கொடு­மைப்­ப­டுத்­தி­யது தொடர்­பாக பிரபு, செந்­தில், அசோக்­கு­மார் ஆகிய மூன்று காவ­லர்­களும் காவல் ஆய்வாளர் நிஷா பார்த்­தி­பனும் ஐ.ஜி. உத்­த­ர­வின்­பே­ரில் பணி­யிடை நீக்­கம் செய்யப்பட்டனர்.

புதுக்­கோட்டை மாவட்­டம், கவ­ரப்­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் சங்­கர், 29. பார்­வை­யற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான இவர், அப்­ப­கு­தி­யில் நடந்து­ வ­ரும் சட்­ட­வி­ரோத மது விற்­பனை குறித்து காவல் கட்­டுப்­பாட்டு அறைக்கு தொலை­பே­சி­யில் புகார் அளித்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து, விரா­லி­மலை காவ­லர்­கள் சிலர் சங்­க­ரை நேரில் சந்தித்து, "எது­வாக இருந்­தா­லும் காவல்நிலை­யத்­தில் புகார் அளித்­தி­ருக்­க­லாம், கட்­டுப்­பாட்டு அறைக்­குத் தெரி­வித்து இருக்க வேண்­டி­ய­தில்லை," என்று கூறியுள்­ள­னர். அப்­போது காவ­லர்­க­ளுக்­கும் சங்­க­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, சங்­கரை காவல் நிலை­யம் அழைத்­துச் சென்ற காவலர்கள் அவரை லத்­தி­யால் தாக்கி சித்திர­வதை செய்துள்ளனர்.