யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

1 mins read
2cb8dcda-0b5a-44ca-bf1b-d1919aa64065
-

மதுரை: கோகுல்­ராஜ் கொலை வழக்­கில் சாகும் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட யுவ­ராஜ், அருண், கிரி­தர், ரஞ்­சித் உள்­பட 10 பேரும் தங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னையை ரத்து செய்­யக் கோரி மதுரை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர். இம்­ம­னுக்­கள் விரை­வில் விசா­ர­ணைக்கு வர உள்­ளன.

சேலம் மாவட்­டம், ஓம­லூ­ரைச் சேர்ந்த பொறி­யி­யல் பட்­ட­தாரி இளை­ய­ரான கோகுல்­ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ெகாடூ­ர­மான முறை­யில் ஆண­வப் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

இந்த வழக்­குத் தொடர்­பில், ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட 10 பேரும் தங்­க­ளது தண்­ட­னையை ரத்து செய்­யக் கோரி மதுரை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.

"சிசி­டிவி காட்­சி­க­ளில் கோகுல்­ராஜை கடத்­தி­ய­தா­கவோ, கொலை செய்­த­தா­கவோ பதி­வு­கள் இல்லை. எனவே கீழமை நீதி­மன்­றம் அளித்­துள்ள ஆயுள் தண்­ட­னையை ரத்து செய்­யும்படி வேண்­டு­கி­றோம்," என மனு­வில் கூறியுள்ளனர்.