மாணவர்கள் கத்தியுடன் வருவதாகக் கூறி முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்

மாணவர்கள் கத்தியுடன் வருவதாகக் கூறி முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்

1 mins read
f3545885-7500-4bf3-b0b2-3b271923fe8a
தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள். படம்: தமிழக ஊடகம் -

தேனி: பள்ளி மாண­வர்­கள் கத்தி­யு­டன் வரு­வ­தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆசி­ரி­யர் சங்கக் கூட்­ட­மைப்­பி­னர் தேனி முதன்மை கல்வி அலு­வ­ல­கத்­தில் முற்றுகைப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தங்களது உயிருக்கு அச்சுறுத் தல் உள்ளதால் பாது­காப்பு அளிக்­கக் கோரியுள்ளனர் ஆசிரியர்கள்.

அண்மையில், தேனி மாவட்­டத்தில் உள்ள தேவ­தா­னப்­பட்டி, ஜி.கல்­லுப்­பட்டி அரசு மேல்­நிலைப்­ பள்­ளி­களில் மாண­வர்­கள் ஆசிரியரைத் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதால் ஆசிரியர்கள் பாது­காப்­பு ­கோரினர்.

இது­கு­றித்து ஆசி­ரி­யர்­கள் கூறு­கை­யில், "தேவா­ரம் பள்­ளி­யில் புத்­த­கம் கொண்­டு­ வரும்படி கூறிய ஆசி­ரி­யரை மாண­வர் தாக்­கி­யுள்­ளார். ஜி.கல்­லுப்­பட்­டி­யில் மாண­வர்­கள் ஒன்­றுசேர்ந்து ஆசி­ரி­யர்­களைக் கிண்­டல் செய்­துள்­ள­னர்.

"தேவ­தா­னப்­பட்டி அரசு மேல்­நிலைப்­பள்­ளி­யில் மாண­வர் ஒருவர் கத்­தி­யு­டன் வகுப்­புக்­குள் வந்து ஆசி­ரி­யரைக் குத்த முயன்­றுள்ளார்.

"இது­கு­றித்து தக­வல் அறிந்த டி.எஸ்.பி. மாண­வரை விசா­ரித்த நிலையில், இப்போது மீண்­டும் அந்த மாணவர் பள்­ளிக்கு கத்­தி­யு­டன் வந்து காவல்துறையினர் முன்­னிலை­யி­லேயே ஆசி­ரி­ய­ருக்கு கொலை­மி­ரட்­டல் விடுத்­துள்­ளார்.

"இத­னால் இந்த முற்­றுகைப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம். அனைத்து ஆசி­ரி­யர் சங்­கங்­களும் இணைந்து வேலை நிறுத்த போராட்­டத்­திலும் ஈடு­பட உள்­ளோம்," என்­ற­னர்.