தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பச் சென்ற ஊழியரே ரூ.9 லட்சத்தை களவாடியது அம்பலம்

1 mins read
a30fd7c9-ae36-41b1-9a6a-0d558e8e2b8f
ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடிய கிருஷ்ணகுமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம். படம்: ஊடகம் -

கட­லூர்: கட­லூர் மாவட்­டம், கே.என். பேட்டை பகு­தி­யில் உள்ள ஒரு தனி­யார் ஏடி­எம் மையத்­தில் ரூ.9 லட்­சம் பணம் களவு போனது.

இம்­மை­யத்­தில் பணம் நிரப்­பிய ஊழி­யரே பணத்­தைக் கள­வா­டிச் சென்­றது காவல்­து­றை­யின் விசா ரணை­யில் தெரி­ய­வந்­தது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட தனி­யார் நிறு­வன ஊழி­யர் கிருஷ்­ண­கு­மார் என்­ப­வ­ரி­டம் இருந்து ரூ.697,000 ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

மீத­முள்ள பணத்தை அவர் என்ன செய்­தார் என்­பது குறித்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

கட­லூர் மாவட்­டம், விஸ்­வ­நாத புரத்­தைச் சேர்ந்­த­வர் கிருஷ்ண மூர்த்தி. இவ­ரது மகன் கிருஷ்ண குமார், 26. இவர், தனி­யார், தேசிய மய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளின் ஏடி­எம் இயந்­தி­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், அவர் தன்­னு­டன் பணி­பு­ரி­யும் மூவ­ரு­டன் சென்று கட­லூ­ரில் உள்ள ஏடி­எம் இயந்தி ரத்­தில் பணத்தை நிரப்­பி­விட்டு வீட்­டுக்­குச் சென்­று­விட்­டார்.

அதன்­பி­றகு, ஏடி­எம் மையத்­தில் இருந்து ரூ.9 லட்­சம் பணம் களவு போய் இருப்­ப­தாக மேற்­பார்­வை­யா­ளர் ராஜா என்­ப­வர் திருப்­பா­தி­ரிப்­பு­லி­யூர் காவல்­நி­லை­யத்­தில் புகார் கொடுத்­தார்.

இதை­ய­டுத்து, ஏடி­எம் இயந் திரத்­தில் பணம் நிரப்­பிய நான்கு ஊழி­யர்­க­ளி­ட­மும் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை செய்­த­னர்.

அப்­போது, ஏடி­எம்­மில் பணம் நிரப்­பி­விட்டு வீட்­டுக்­குச் சென்ற பிறகு, நள்­ளி­ர­வில் தான் மட்­டும் தனி­யாக வந்து ரக­சிய எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி இயந்­தி­ரத்­தில் இருந்து ரூ.9 லட்­சம் பணத்­தைத் திரு­டி­யதையும் அவ­ச­ர­க­தி­யில் சாவியை இயந்­தி­ரத்­தி­லேயே விட்­டு­விட்­டுச் சென்­ற­தை­யும் கிருஷ்­ண­கு­மார் ஒப்புக்­கொண்­டார்.