வேளாண்மைத் துறைக்கு ரூ.33,007 கோடி ஒதுக்கீடு பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.2,339 கோடி; இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி ஒதுக்கீடு

2 mins read
b548add1-7844-4247-ad95-52180dc0d29f
முதல்வருடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த வேளாண் அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சட்­டப்­பே­ர­வை­யில் 2022-23ஆம் நிதி­யாண்­டுக்­கான வேளாண் துறை­யின் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கையை வேளாண் அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் நேற்று தாக்­கல் செய்­தார்.

நேற்று முன்­தி­னம் மாநில அர­சின் பொது வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கையை நிதி­ய­மைச்சா் பழனி வேல் தியா­க­ரா­ஜன் தாக்­கல் செய்­த­தைத் தொடர்ந்து, ேநற்று வேளாண் துறைக்­கான அறிக்­கை­யைத் தாக்­கல் செய்து எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை­யின் முக்­கிய அம்­சங்­கள்:

வேளாண் துறை­யின் பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கும் ஒட்­டு­மொத்­த­மாக ரூ.33,007 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு உள்­ள­தா­கக் கூறி­ய­வர், கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு சிறப்பு ஊக்­கத் தொகை வழங்­கு­வது குறித்­தும் அறி­வித்­தார்.

பயிர்க்­காப்­பீடு திட்­டத்­திற்கு இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் ரூ.2,339 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்ள தாகக் குறிப்­பிட்­ட­வர், கரும்பு சாகு படிக்கு ரூ.10 கோடி ஒதுக்­கப் பட்­டுள்­ளது என்­றார்.

"வேளாண் பட்­டப்­ப­டிப்பை முடித்த 200 இளை­ஞர்­க­ளுக்கு வேளாண் தொழி­லில் ஈடுபட தலா ரூ.1 லட்­சம் நிதி வழங்­கப்­படும்.

"விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்க ரூ.5,157 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் மூலி­கைத் தோட்­டங்­கள் 4,000 வீடு­களில் அமைக்­கப்­படும். இதற்­குத் தேவை­யான மூலி­கைச்­செ­டி­கள் அரசு தோட்­டக்­கலை பண்­ணை­கள் மூலம் உற்­பத்தி செய்து வழங்­கப்­படும்.

"தக்­கா­ளி­யின் விலையை சீராக வைத்­தி­ருக்க, பரு­வ­மில்­லாத காலங்­க­ளி­லும் அதன் சாகு­படி ஊக்­கு­விக்­கப்­படும். 10 புதிய உழ­வர் சந்­தை­கள் ரூ.10 கோடி செல­வில் அமைக்­கப்­படும்," என அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் தெரிவித்தார்.

வர­வேற்­பும் எதிர்ப்­பும்

இதற்­கி­டையே, அர­சின் நிதி­நிலை அறிக்­கையை வர­வேற்­றும் எதிர்த்­தும் கல­வை­யான விமர்­ச­னங்­களை அர­சி­யல் கட்­சித் தலை­வா்­கள் பல­ரும் கூறி­வ­ரு­கின்­ற­னர்.

வரு­வாய் அதி­க­ரித்­த­போ­தும் அதிக கடன் வாங்கி இருப்­ப­தாக எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

"நிதி­நிலை அறிக்கை எது­வும் இல்­லாத வெற்று அறிக்கை," என்­றும் அவர் விமர்­சித்­துள்­ளார்.

"தொலை­நோக்­குத் திட்­டம் இல்­லாத பகல் கனவு அறிக்கை. மத்­திய அர­சின் திட்­டங்­கள் மாநில அர­சின் திட்­டங்­க­ளாக பெயர் மாற்றி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது," என பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

"நலி­வுற்ற தொழில் முனை­வோரை மீட்­டெ­டுக்­கும் திட்­டம் அறிக்­கை­யில் இல்லை. ஏமாற்­றம் அளிக்­கிறது," என இந்­திய தொழில் முனை­வோர் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. வளா்ச்­சிப் பாதை­யில் தமி­ழ­கம் செல்­லும் முயற்­சி­யாக அறிக்கை உள்­ளதாக தமி­ழக காங்­கி­ரஸ் கட்­சி­த் தலைவர் கே.எஸ்.அழ­கிரி கூறி­யுள்­ளார்.