சென்னை: தமிழகத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய தங்க நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், தகுதி உள்ளவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நகைகள் திரும்ப வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கும் குறைவாக தங்க நகைகள் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின்போது ஆளும் திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், இப்போது, இம்மாதம் 31ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 14 லட்சத்து 40,000 பேரிடம் நகைகள் திரும்பக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று கூறினார்.
"நிதி நிலைமை சீரான பின்னரே குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்," என்று பொது வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நிதியமைச்சா் பழனி வேல் தியாகராஜன் ெதரிவித்தார். இதனால் அதிருப்தியில் இருந்த மக்கள், இப்போது ஆறுதல் அடைந்துள்ளனர்.

