ஆசிய நாடுகளில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா

ஆசிய நாடுகளில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா

2 mins read
e170b39f-f4a0-4596-80fb-bb8750795996
சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில்ஹைதரபாத்தில்உள்ள 'பயோலாஜிகல் இ' எனும் மருந்துநிறுவனம் தயாரித்த 'கோர்பிவேக்ஸ்' கொவிட்-19தடுப்பூசி பள்ளி மாணவர் களுக்குப் போடப்பட்டது. -

சென்னை: ஆசிய நாடு­களில் கொரோனா மீண்­டும் வேகம் எடுத்து வரு­வ­தால் தமி­ழக மக்­கள் கவ­ன­மு­டன் இருக்க வேண்­டும் என்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் 25வது மெகா தடுப்­பூசி முகாம் நேற்று 50,000 இடங்­களில் நடை­பெற்­றது.

சென்னை தேனாம்­பேட்டை தாமஸ் சாலை­யில் நடை­பெற்ற மெகா தடுப்­பூசி முகாமை மருத்­து­ வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேரில் பார்­வை­யிட்­டார்.

அப்­போது பேசிய அமைச்­சர், கடந்த ஏழு நாள்­க­ளாக கொரோனா தொற்­றின் அளவு 100க்கு கீழ் குறைந்­துள்­ளது. அதே­போல் இறப்பும் பூஜ்­ஜி­யம் என்ற அள­வில் உள்­ளது. அண்டை மாநி­ல­மான கேர­ளா­வில் சனிக்­கி­ழமை அன்று 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் 59 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். கேரளா-தமி­ழக எல்­லைப்­ப­கு­தி­களில் பொது­மக்­கள் போக்­கு­வ­ரத்­துக்­கான 13 வழி­கள் இருப்­ப­தால் கவ­ன­மு­டன் இருக்க வேண்­டும்," என்றார்.

"ஆசிய நாடு­கள் அனைத்­தி­லும் பெரிய அள­வில் தொற்று வேக­மாக பரவிக் கொண்­டி­ருக்­கிறது. எனவே தமி­ழ­கத்­தில் பொது­மக்­கள் மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்.

"தடுப்­பூசி மட்­டும்­தான் தொற்றில் இருந்து விடு­பட ஒரே தீர்வு," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாண விகள் படிப்பது அதிகரிக்கும்.

"அனைவரும் பட்டதாரிகளாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 30 லட்சம் மாணவிகள் பட்டதாரி களாக உருவாக இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இது தங்கத்தையும் தாண்டி மாணவிகளை வைரமாக மாற்ற கூடிய நல்ல திட்டம்," என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் மேலும் கூறினார்.