10,000 பொறியியல் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும் ஆபத்து

10,000 பொறியியல் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும் ஆபத்து

2 mins read
6a6f4009-8901-4821-832b-894779a3303d
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள்கள் திருத்தம் பணியில் சிக்கல்

இணையம் வாயிலாக தேர்வு எழுதிய சுமார் 10,000 மாணவர்கள் காலக் கெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னை: கிரு­மித்­தொற்று அச்­சம் கார­ண­மாக வழக்­க­மாக கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் நடத்­தப்­பட வேண்­டிய பொறியியல் பட்டப் படிப்பு தேர்வு தள்ளி வைக்­கப்­பட்­டது.

பின்­னர் பிப்­ர­வரி மாதம் இணை­யம் வழி­யாக தேர்வு நடத்­தப்­பட்­டது. இதன்­படி கல்­லூ­ரி­க­ளுக்கு வினாத்­தாள்­கள் அனுப்பி வைக்­கப்­பட்டு காலை 9 மணிக்கு வினாத்­தாள் வெளி­யிட்­டது.

அதை பார்த்து மாண­வர்­கள் வீட்­டில் இருந்­த­ப­டியே தேர்வு எழு­தி­னர். பின்­னர் விடைத்­தாள்­களை 'ஸ்கேன்' செய்து தேர்வு நேரம் முடிந்த 30 நிமி­டங்­க­ளுக்­குள் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

அதே விடைத்தாள்­களை அதே நாள் மாலை ஐந்து மணிக்­குள் வேக அஞ்சல் மூலம் அனுப்ப வேண்­டும். ஆனால் சுமார் 10,000 மாண­வர்­கள் குறிப்­பிட்ட கால­கெ­டு­வுக்­குள் விடைத்­தாள்­களை பதி­வேற்­றம் செய்­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இத­னால் அந்த மாண­வர்­கள் விடு­முறை எடுத்­துள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது.

இதன் கார­ண­மாக அந்த 10,000 மாண­வர்­களும் தேர்­வில் தோல்வி அடை­யும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இது பற்றி விளக்­கம் அளித்­துள்ள அண்ணா பல்­க­லைக்­க­ழக அதி­கா­ரி­கள், "பிப்­ர­வரி 1 முதல் 12ஆம் தேதி வரை இணை­யம் வழி­யாக தேர்­வில் பங்­கேற்று விடைத்­தாள்­களை பதி­வேற்­றம் செய்­யா­த­வர்­கள் விடு­முறை என எடுத்­துக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது பற்றி ஆலோ­சிக்க குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­யுள்­ள­னர்.

இதற்கிடையே, தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.