அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை

அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை

1 mins read
523b03c3-851b-4b61-ac7e-d7a46c673fe4
-

சென்னை: அதி­முக எம்­எல்­ஏக்­கள் சட்­ட­ச­பை­யில் எப்­படி நடக்க வேண்டும், யார், யார் பேச வேண்­டும் என்­பது குறித்து ஆலோ­சனை வழங்­கப்­பட்டு உள்­ளது.

சென்ற சனிக்­கி­ழமை கட்சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்­டம் நடை­ பெற்­றது.

இந்­தக் கூட்­டம், ஒருங்­கி­ணைப்­பா­ளர் பன்­னீர்­செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சாமி ஆகி­யோர் தலை­மை­யில் நடை­பெற்றது. இதில் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தத்­தில் மக்­கள் நலன் சார்ந்த பிரச்­சி­னை­கள், தொகுதி பிரச்­சி­னை­கள் குறித்து எம்எல்ஏக்கள் எவ்­வாறு பேச வேண்­டும், எவ்­வாறு நடந்து கொள்ள வேண்­டும் என்று ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது. சட்­ட­ச­பை­யில் பேச அதி­முக எம்எல்ஏக்கள் பல­ரும் வாய்ப்பு கேட்­டுள்­ள­னர்.

ஒரு நாளைக்கு இரு­வர் வீதம், இரண்டு நாள்­களில் நான்கு பேர் மட்­டும்­தான் பேச முடி­யும். 3வது நாளில் தலை­வர்­கள் பேசு­வார்­கள். எனவே அனை­வ­ருக்­கும் வாய்ப்பு­அளிக்க முடி­யாது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. யார் யார் பேச­லாம் என்­ப­தும் இந்­தக் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது.

ஆளும் கட்­சி­யின் தவ­று­களைச் சுட்­டிக்­காட்ட வேண்­டும் என்­றும் தலை­வர்­கள் பேசும்­போது எம்எல்ஏக்கள் அனை­வ­ரும் சபை­யில் இருக்க வேண்­டும் என்­றும் கூறப்­பட்டு உள்­ளது. கேள்வி நேரம் நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பப்­பட உள்­ள­தால் தொகுதிப் பிரச்­சி­னை­களை அதி­கம் பேச வேண்­டும், மக்­கள் பிரச்­சி­னை­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும் என்றும் எம்எல்ஏக்க­ள் அறி­வு­றுத்­தப்­பட்­டு உள்ளனர்.