செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது, வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அவர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கைபேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

