ஜெயா மரண விசாரணை; ஓபிஎஸ் முன்னிலையாகிறார்

ஜெயா மரண விசாரணை; ஓபிஎஸ் முன்னிலையாகிறார்

1 mins read
f9965e75-1c05-49de-bfc6-2274e03de36f
-

சென்னை: நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யி­லான விசா­ரணை ஆணை­யத்­தின் முன்பு ஓ. பன்­னீர் செல்­வம் இன்று முன்­னி­லை­யாக விருக்­கி­றார்.

முன்­னாள் முதல்­வர் ஜெய லலிதா மர­ணம் குறித்து நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யில் விசா­ரணை நடை­பெற்று வந்­தது.

ஜெய­ல­லி­தா­வோடு தொடர்­பு­ உ­டை­ய­வர்­கள், மருத்­து­வ­ம­னை­யில் அவ­ருக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வர்­கள் உள்­ளிட்ட பல­ரி­டம் பல்­வேறு கட்ட விசா­ரணை நடந்­துள்­ள­தாக மாலை மலர் வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் ஆறு­மு­க­சா­மி­யின் விசா­ர­ணைக்கு உச்ச நீதி­மன்­றம் தடை விதித்­தது. அதன் பின்­னர் மீண்­டும் விசா­ரணை நடத்த நீதி­மன்­றம் அனு­மதி அளித்­த­தை­ய­டுத்து மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் விசா­ரணை தொடங்கி நடை­பெற்று வரு­கிறது.

2016 டிசம்­பர் 4ஆம் தேதி ஜெய­ல­லி­தா­வுக்கு ஏற்­பட்­டது மார­டைப்­பு­தான் என்­றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்­தும் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் விசா­ரணை ஆணை­யத்­தில் அப்­பல்லோ மருத்­து­வர் மதன்­கு­மார் வாக்­கு­மூ­லம் அளித்து இருந்­தார்.

அதன் பின்­னர் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம், மார்ச் 21ஆம் தேதி நேரில் முன்­னி­லை­யா­கும்­படி அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டது. சசி­க­லா­வின் உற­வி­னர் இள­வ­ர­சி­யும் அன்­றைய தினம் முன்­னி­லை­யாக உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி ஓ.பன்­னீர்­செல்­வம் முதல் முறை­யாக இன்று விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­கி­றார். ஜெய­ல­லிதா மர­ணத்­தில் மர்­மம் உள்­ள­தா­க­வும் ஜெய­ல­லி­தா­வுக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்­சை­கள் குறித்து குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் சந்­தே­கங்­க­ளை­யும் ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி­யி­ருந்­தார். இதன் தொடர்­பில் விசா­ர­ணை­யின்­போது அவ­ரி­டம் விளக்­கம் கேட்­கப்­படும் எனத் தெரி­கிறது.