'சாலை விபத்துகளைக் குறைப்பதே இலக்கு'

'சாலை விபத்துகளைக் குறைப்பதே இலக்கு'

1 mins read
1fb39752-b14c-425d-9340-87875d6d6a41
-

சென்னை: சாலை விபத்­தில் ஒரு­வர் கூட உயி­ரி­ழக்­கக்கூடாது என்­பதை முக்­கிய நோக்­க­மா­கக் கொண்டு தமி­ழக அரசு செயல்­பட்டு வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் வரவு செல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நடை­பெற்று வரும் நிலை­யில், நேற்று நடை­பெற்ற கேள்வி நேரத்­தின்­போது, தமி­ழ­கத்­தில் ஏற்­படும் சாலை விபத்­து­க­ளைக் குறைக்க உரிய வழி­காட்டு நெறி­மு­றை­களை வகுக்க அரசு முன்­வ­ருமா? என சட்ட­மன்ற உறுப்­பி­னர் அருள் கேள்வி எழுப்­பி­னார்.

இதற்கு பதி­ல­ளித்­துப் பேசிய முத­ல்வர், சாலை விபத்­து­களைக் குறைப்­பதே அர­சின் முதன்­மை­யான இலக்கு எனக் கூறி­னார்.

அத்­து­டன், சாலை விபத்­து­களைக் குறைக்க உயர்­மட்ட குழுவைக் கூட்டி, ஆேலாசனை நடத்தி இன்­னு­யிர் காப்­போம், நம்­மைக் காக்­கும் 48 ஆகிய திட்­டங்கள் தொடங்­கப்­பட்­ட­தாகக் கூறிய அவர், இதன்­மூ­லம் விபத்­தில் சிக்­கும் அனை­வ­ருக்­கும் 48 மணி நேர இல­வச சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வதாகக் குறிப்­பிட்­டார்.

இத்­திட்­டத்­தின் மூலம் இது­வரை 33,247 பேர் இல­வச சிகிச்சை பெற்­றுள்­ள­தா­கக் கூறிய முதல்வர், இதன்­மூ­லம் 33,000 பேரின் இன்­னு­யிர் காப்­பாற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுட்­டிக்­காட்­டி­ உள்ளார்.