முதல்வர்: தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலையில்லா சூழ்நிலை நீங்கும் ஒரேநாளில் 8,752 பேருக்கு பணி நியமன ஆணை

முதல்வர்: தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலையில்லா சூழ்நிலை நீங்கும் ஒரேநாளில் 8,752 பேருக்கு பணி நியமன ஆணை

2 mins read
7cb6dff3-bab7-47dc-bcbb-20f622453fec
வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையர்கள் சிலருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். படம்: தமிழக ஊடகம் -

வண்­ட­லூர்: செங்­கல்­பட்டு மாவட்­டம், வண்­ட­லூ­ரில் நடை­பெற்ற தனி­யார் துறைக்­கான வேலை­வாய்ப்பு முகா­மில், ஒரேநாளில் 8,752 பேருக்கு வேலை­வாய்ப்­பு வழங்­கப்­பட்­டது. இவர்­களில் சில­ருக்குப் பணி நிய­மன ஆணை­களை வழங்­கி முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பேசி­னார்.

"தமி­ழ­கத்­தில் வேலை இல்லை, வேலை கிடைக்­க­வில்லை, வேலை­வாய்ப்பை பெற­மு­டி­யாத நிலை­யில் இருக்­கி­றேன் என்று பல­ரும் வருந்­தும் நிலை, அடுத்த ஐந்து ஆண்­டு­கா­லத்­திற்­குள் நீங்­கி­வி­டும் என்ற உறு­தியை அளிக்­கி­றேன்.

"அனை­வ­ருக்­கும் உயர் கல்வி, அனை­வ­ருக்­கும் வேலை என்­பதே நமது அர­சின் இலக்­காக உள்­ளது.

"அதே­போல், அனை­வ­ருக்­கும் ஏதா­வது ஒரு வேலை என்பதல்ல. அவ­ர­வர் படிப்­புக்­கேற்ற, தகு­திக்­கேற்ற வேலை வழங்­கப்­பட்­டாக வேண்­டும் என்­பதே இந்த அர­சின் லட்­சி­யம்," எனக் கூறி­ய­வர், அத­னால்­தான் பள்­ளிக் கல்­வி­யை­யும் கல்­லூ­ரிக் கல்­வி­யை­யும் மேம்­படுத்தி வரு­கி­றோம் என்­றார்.

"இந்த அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்­பேற்­றது முதல் இது­வரை நடந்­துள்ள வேலை­வாய்ப்பு முகாம்­களில் 5,708 நிறு­வ­னங்­கள் கலந்­து­கொண்­டுள்­ளன. 250,708 பேர் வேலை­வாய்ப்­பு­களை நாடி வந்­துள்­ள­னர். அவர்­களில் 41,213 பேருக்கு வேலை கிடைத்­துள்­ளது. இவர்­களில் முக்­கி­ய­மாக 517 பேர் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்," என்­றும் முதல்­வர் மேலும் கூறி­னார்.

புதிய மாவட்­ட­மாக செங்­கல்­பட்டு மாவட்­டம் துவக்­கப்­பட்ட பின்­னர், முதல்­மு­றை­யாக நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற வேலை­வாய்ப்பு முகா­மில் செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், சென்னை, திரு­வள்­ளூர் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த இளை­ஞர்­கள் பெரு­ம­ள­வில் கலந்­து­கொண்­ட­னர்.

இம்­மு­கா­மில் பங்­கேற்ற 507 தனி­யார் துறை நிறு­வ­னங்­கள் 73,950 வேலை­க­ளுக்கு ஆள்­கள் தேவைப்­ப­டு­வ­தாக அறி­வித்­தி­ருந்த நிலை­யில், 8,752 பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.

லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்பு

இதற்­கி­டையே, தோ்தல் சம­யத்­தில் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தியை நிறை­வேற்­றும் வித­மாக, ஒரு லட்­சம் பேருக்கு அரசு வேலை வழங்­கு­வ­தற்­கான அறி­விப்பை சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தில் திமுக அரசு வெளி­யிடவேண்­டும் என பாமக நிறு­வனா் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்ளாா்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் புதி­தா­கப் பொறுப்­பேற்­றுள்ள பக­வந்த்­சிங் மான் தலை­மை­யி­லான ஆம் ஆத்மி அர­சு, இளை­ஞா்­கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு 25,000 அரசு வேலை வாய்ப்­பு­களை வழங்க முடிவு செய்­தி­ருப்­ப­தை­யும் அவர் மேற்­கோள் காட்­டி­யுள்­ளார்.