பெரம்பூர்: சென்ைனயில் கடந்த 17ஆம் தேதி முதல் அடுத்தடுத்து மூன்று சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. இவை அனைத்திலும் ஒரே ஆடவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஏழு கிணறு பகுதியில் உள்ள தங்கப் பட்டறையில் நகையை உருக்குவதற்காக வந்த இளைஞரை பூக்கடை போலிசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் மண்ணடி, மரக்காயர் தெருவைச் சேர்ந்த 22 வயது முகம்மது ஃபைசல் என்பது ெதரியவந்தது.
இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இளையோருக்கான ஆணழகன் போட்டியில் 'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் படித்தபோது துபாய் நண்பர் ஒருவரின மூலம் ஐபோன்களை வாங்கி அவற்றை குறைந்த விலைக்கு நண்பர்களுக்கு விற்று வந்தார்.
பலர் பணம் தராமலும் சிலர் குறைத்து பணத்தைக் கொடுத்ததாலும் ஃபைசல் பெரும் கடனாளி ஆனார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமல் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தற்போதுதான் முதல்முறையாக அவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் ஃபைசலின் தந்தை துபாயில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் பொறியியல், மருத்துவம் படித்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ஃபைசல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

