கருக்கலைப்பின்போது பெண் உயிரிழப்பு: சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

கருக்கலைப்பின்போது பெண் உயிரிழப்பு: சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

1 mins read
dc214fa1-4e04-4599-8b40-ba2b5ad66ba5
-

திருக்­கோ­வி­லூர்: திருக்­கோ­வி­லூர் அருகே கருக்­க­லைப்­பின்­போது பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் தொடர்­பில், கருக்­க­லைப்பு செய்துவிட்ட மருந்தக உரி­மை­யா­ளர் முத்­துக்­கு­மாரி, தாதி கவிதா ஆகிய இரு பெண்­கள் குண்­டர் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், திருக்­கோ­வி­லூர் அருகே உள்ள ரிஷி­வந்­தி­யம் பகு­தியைச் சேர்ந்த வர் சின்­னத்­தம்பி. இவரது மனைவி செல்வி, 30. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்­தை­கள் உள்­ளனர்.

இந்­நி­லை­யில், செல்வி மீண்­டும் கர்ப்­பம் அடைந்துள்­ளார். ஐந்து மாத கர்ப்­ப­மாக இருந்த செல்வி தனது கரப்­பத்தைக் கலைக்க முடிவு எடுத்து, தனி­யார் மருத்­து­வ­ம­னைக்குச் சென்று ஆலோ­சனை பெற்றுள்­ளார். அங்கு சிகிச்சைக்கான செலவுத்தொகை அதி­க­மாக கேட்­கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, செல்வி அப்­பகுதி­யில் மருந்துக் கடையை நடத்தி வரும் மணி­கண்­டன் மனைவி முத்­துக்­கு­மாரி, 40, என்­ப­வ­ரி­டம் கரு­க்க­லைப்பு செய்­வ­தற்­காகச் சென்­றுள்­ளார்.

முத்­துக்­கு­மாரி தனது வீட்டு மாடி­யில் வைத்து ஆ.பாண்­ட­லம் பகு­தியைச் சேர்ந்த தாதி கவிதா, 38, என்ப­வ­ரின் உத­வி­யோடு செல்­விக்கு கருக்­க­லைப்பு செய்­தி­ருக்கிறார். இந்நிலையில், அதிக அளவு ரத்­தப்­போக்கு ஏற்­பட்­டு செல்வி உயி­ரி­ழந்­தார்.