ஓபிஎஸ்: சசிகலா சதித்திட்டம் ஏதும் தீட்டவில்லை

ஓபிஎஸ்: சசிகலா சதித்திட்டம் ஏதும் தீட்டவில்லை

1 mins read
36e3e284-522e-4bc5-8ebb-24f166426267
-

சென்னை: ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக சசி­கலா எந்­த­வித சதித்­திட்­ட­மும் தீட்­ட­வில்லை என அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி­யுள்­ளார்.

ஜெய­ல­லிதா மர­ணம் குறித்து விசா­ரணை நடத்தி வரும் ஆறு­முகசாமி விசா­ரணை ஆணை­யத்­தில் நேற்று அவர் இரண்­டா­வது நாளாக நேரில் முன்­னி­லை­யா­னார்.

அப்­போது ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக சசி­கலா குடும்­பத்­தி­ன­ரும் சதித்­திட்­டம் ஏதும் தீட்­ட­வில்லை என்­றார்.

"ஜெய­ல­லிதா குற்­ற­வாளி என கர்­நா­டக நீதி­மன்­றம் தீர்ப்பு கூறி­ய­போது, என்னை அழைத்து அதி­முக எம்­எல்­ஏக்­கள் கூட்­டத்­தைக் கூட்ட சொன்­னார் ஜெய­ல­லிதா. தமது பாது­கா­வ­லர் வீரப்­பெ­ரு­மாள் மூலம் நத்­தம் விஸ்­வ­நா­தனை அழைத்து, ஓ.பன்­னீர்­செல்­வம்தான் முதல்­வர் என ஜெய­ல­லிதா கூறி­னார்.

"மிகுந்த துய­ரத்­து­டன் அழுது கொண்­டி­ருந்­த­போது, என்­னி­டம் அழக்­கூ­டாது என்­றும் தைரி­ய­மாக இருக்க வேண்­டும் என்­றும் கூறி­னார்," என்று தனது வாக்கு­மூ­லத்­தில் ஓ.பன்­னீர்­செல்­வம் குறிப்­பிட்­டுள்­ளார்.

மருத்­து­வ­ம­னை­யில் இருந்த போது ஜெய­ல­லி­தா­வுக்கு என்ன மாதி­ரி­யான உண­வு­கள் வழங்­கப்­பட்­டன என்­பது குறித்து தமக்கு எது­வும் தெரி­யாது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"மருத்­து­வ­ம­னை­யில் ஜெய­ல­லிதா நன்­றாக இருப்­ப­தாக சசி­கலா என்­னி­டம் கூறி­ய­தை­தான் நான் அமைச்­சர்­க­ளி­டம் தெரி­வித்­தேன்," என்­றார் ஓபி­எஸ்.