புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டின்போது மாடுபிடி வீரர்கள் காயமடையாமல் இருக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தலாம் என இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்ற இரண்டு இடங்களில் சில காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தி அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் மற்ற இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளிலும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மாடுபிடி வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

