ரூ.100 கோடி மோசடி: துறைமுக அதிகாரி கைது

ரூ.100 கோடி மோசடி: துறைமுக அதிகாரி கைது

1 mins read
626fde2a-b3bf-478c-8716-15054112524d
-

சென்னை: சென்னை துறை­முக அறக்­கட்­ட­ளை­யின் நூறு கோடி ரூபாய் தொகையை மோசடி செய்து அப­க­ரிக்க உத­விய குற்­றச்­சாட்­டின் பேரில் துறை­முக அதி­காரி ரகு­பெர்­னார்ட் கைதா­னார்.

அறக்­கட்­டளை பணத்தை வைப்­புத்­தொ­கை­யா­கச் செலுத்­திய வங்­கி­யில் கணேஷ் நட­ரா­ஜன் என்­ப­வர் பெய­ரில் ஒரு கணக்கு தொடங்­கப்­பட்­டது.

அவர் சென்னை துறை­மு­கத்­தின் நிதிப் பிரிவு துணை இயக்கு­நர் என்­ப­தற்­கான போலி ஆவ­ணங்­க­ளைக் காண்­பித்து கணக்கு தொடங்­கப்­பட்ட நிலை­யில், அறக்­கட்­டளை பணத்தை அவ்­வப்­போது தன் கணக்­குக்கு மாற்­றி­யுள்­ளார் கணேஷ்.

அவர் ரூ.45 கோடி வரை சுருட்­டிய நிலை­யில், இந்த மோசடி அம்­ப­ல­மா­னது. அவர் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்­டார்.

இந்த நூதன மோச­டி­யில், வெளி­நாட்­டைச் சேர்ந்த இரு­வர், வங்கி மேலா­ளர் உட்­பட பலர் உடந்­தை­யாக இருந்­தது தெரிய வந்­தது.

அனை­வ­ரும் கைதான நிலை­யில், துறை­முக கண்­கா­ணிப்­பா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்த ரகு­பெர்­னார்ட் வங்­கி­யில் இருந்த வைப்­புத்­தொ­கையை விரை­வாக கணேஷ் நட­ரா­ஜன் கணக்­குக்கு மாற்ற உதவி செய்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளார். இதை­ய­டுத்து அவர் கைதா­னார்.