சென்னை: திருமண ஆசை காட்டியும் விளம்பரப் படங்களில் நடிக்கலாம் என்று கூறி நம்ப வைத்தும் பல இளம் பெண்களைச் சீரழித்த 27 வயதான முகமது ஷயாத் என்ற ஆடவரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
இவரது கைபேசியில் ஏராளமான ஆபாசப் படங்களும் காணொளிகளும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப் பழக்கம் உள்ள ஷயாத் பல்வேறு இரவு விடுதிகளுக்கு இளம் பெண்களை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுவரை 20 பெண்களை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், 40 பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களைக் கவர்ச்சியாகப் படம் எடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததுடன், பல பெண்களை துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஷயாத்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பல்வேறு உயர் ரக தங்குவிடுதிகளில் நூறு அறைகளை முன்பதிவு செய்து இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

