முதலீடுகளை ஈர்க்க முதல்வர் துபாய்க்கு நான்கு நாள் பயணம்

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் துபாய்க்கு நான்கு நாள் பயணம்

1 mins read
977bea36-6155-40a7-88e2-a68b09769b42
-

சென்னை: துபா­யில் நடை­பெற்று வரும் அனைத்­து­ல­கத் தொழில் கண்­காட்­சி­யில் பங்­கேற்­ப­தற்­காக அர­சு­மு­றைப் பய­ண­மாக முதல்வா் மு.க.ஸ்டா­லின் நேற்று மாலை துபாய்க்­குப் புறப்­பட்­டுச் சென்றாா்.

இன்று 25ஆம் தேதி முதல் 31ஆம் ேததி வரை உல­கக் கண்­காட்­சி­யில் உள்ள தமிழ்­நாட்டு அரங்­கில் 'தமிழ்­நாடு வாரம்' கடைப்­பி­டிக்­கப்­பட உள்­ளது. இந்த அரங்கை முதல்­வர் இன்று திறந்து வைக்­கி­றார்.

இவ்­வ­ரங்­கில் தொழில்­துறை, மருத்­து­வம், சுற்­றுலா, கலை, கலா­சா­ரம், கைத்­தறி, கைவி­னைப் பொருள்­கள் உள்­ளிட்ட முக்­கிய துறை­களில் தமிழ்­நாட்­டின் சிறப்பை உல­கிற்கு எடுத்­துக் காட்­டும் வண்­ணம் காட்­சிப் படங்­களும் வைக்­கப்­பட்­டுள்­ளன.

தனது துபாய், அபு­தாபி பய­ணத்­தின்­போது, தமிழ்­நாட்­டுக்கு மேலும் புதிய முத­லீ­டு­களை ஈர்க்­கும் வகை­யில், அங்­குள்ள அமைச்­சர்­கள், முன்­ன­ணித் தொழில் நிறு­வ­னங்­க­ளின் தலைமை நிர்­வாக அதி­காரிகளை­யும் மு.க.ஸ்டா­லின் சந்­தித்­துப் பேச உள்­ளார்.

அங்­குள்ள புலம்­பெ­யர் தமி­ழர் களைச் சந்­தித்­துப் பேசவும் திட்டம் உள்ளதாக மாநில அரசு வெளி­யிட்டுள்ள செய்­திக் குறிப்­பில் குறிப்பிடப்பட்டுள்­ளது.