புதுச்சேரியில் ஒரு 'காவலர்கள் கிராமம்': மக்கள் பெருமிதம்

புதுச்சேரியில் ஒரு 'காவலர்கள் கிராமம்': மக்கள் பெருமிதம்

1 mins read
07e6e102-97cf-453f-b0b9-b29f1bb2c946
செட்டிப்பட்டு கிராம இளையர்கள் காவலர்களாக ஒரே நேரத்தில் தேர்வாகியுள்ள மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர். படம்: ஊடகம் -

செட்டிப்பட்டு: புதுச்­சே­ரி­யில் உள்ள செட்­டிப்­பட்டு என்ற கிரா­மம் 'காவ­லர்­கள் கிரா­மம்' என அழைக்­கப்­படு­கிறது. ஏனெ­னில், இந்­தக் கிரா­மத்­தைச் சேர்ந்த நூற்­றுக்­கும் மேலா­னோர் காவ­லர்­க­ளா­கப் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்.

அத்­து­டன், அண்­மை­யில் நடந்து முடிந்­துள்ள காவ­லர் பணிக்­கான தேர்­வி­லும் திருக்­க­னூர் அருகே உள்ள செட்­டிப்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த ஏழு பேர் ஒரே சம­யத்­தில் தேர்ச்சிபெற்று இப்­போது ெவற்றி யைக் கொண்­டாடி உள்­ள­னர்.

இவர்­களில் பெரும்­பா­லா­னோர் கூலித் தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­கள்.

யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரி­யி­லும் தமி­ழக காவல்­து­றை­யிலும் செட்­டிப்­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த 100 பேர் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இவர்­களில் பலர் காவல் ஆய்­வா­ளர், உதவி காவல் ஆய்­வா­ளர், ஏட்டு, காவல்­துறை அதி­கா­ரி­கள், ஊர்க்­கா­வல் படை வீரர்­கள், பெண் காவ­லர்­கள் என பல்­வேறு பிரி­வு­க­ளி­லும் தனி முத்­திரை பதித்து வரு­கின்­ற­னர்.

"எங்­கள் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­களில் அதி­க­மா­னோர் புதுச்­சேரி காவ­லர்­க­ளாக தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளைக் காட்­டி­லும் வேறு என்ன வேண்­டும் எங்­கள் கிரா­மத்­துக்குப் பாது­காப்பு?" என செட்­டிப்­பட்டு மக்­கள் பெரு­மி­தம் அடை­கின்­ற­னர்.