'இளைஞர்கள் ரத்ததானம் செய்தால் ஒரு மரணம்கூட நிகழாது'

'இளைஞர்கள் ரத்ததானம் செய்தால் ஒரு மரணம்கூட நிகழாது'

1 mins read
91037b9e-f297-4dd2-a9d0-a90969db6d54
கிரண் வர்மா. ஊடகம் -

வேலுார்: டெல்­லி­யைச் சேர்ந்­த­வர் சமூக சேவ­கர் கிரண் வர்மா. இவர் இந்­திய மக்­க­ளி­டையே ரத்த நன்­கொடை வழங்­கு­வது குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 21,000 கி.மீ. தூர நடை­ப்ப­ய­ணத்தை கடந்­தாண்டு டிசம்­பர் மாதம் திரு­வ­னந்­த­புரத்­தில் தொடங்­கி­னார்.

நேற்று வேலூர் வந்த இவர், செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, கொரோனா பர­வ­லுக்­குப் பிறகு ரத்­த­தா­னம் செய்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­து­விட்­டது என்று வருந்தியவர், "2025ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இந்­தி­யா­வில் ரத்­தத்­திற்­காக காத்­தி­ருந்து யாரும் இறக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த நடை­ப்ப­ய­ணம் மேற்­கொள்கிறேன். ஐந்து மில்­லி­யன் இளை­ஞர்­கள் ரத்­த­தா­னம் செய்­யத் தொடங்­கி­னால் போதும். இந்­தி­யா­வில் ஒரு மர­ணம் கூட ஏற்­ப­டாது," என்­றார்.