ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் ஒருபுறம் 16 ேபர் கைது செய்யட்டுள்ள நிலையில், மறுபுறம் 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கைதான மீனவர்களை விடுவிக்கும்படி மத்திய-மாநில அரசுகளும் அவ்வப்போது வலியுறுத்தி வருகின்றன.
புதன்கிழமை நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை தங்களது எல்லை யைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அத்துடன், அவர்களது இரு விசைப்படகு களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மீனவக் குடும்பத்தினர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மறுபுறம், நாகப்பட்டினம், காரைக்கால் கடற்கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களைக் கைது செய்து, இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக் கைதிகளாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை காவல்துறையினர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிபதி கஜநிதிபாலன் விசாரணை நடத்தி 22 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அத்துடன், கைப்பற்றப்பட்ட இரு படகுகளில் ஒரு படகை அரசுைடமையாக்கி உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் ஒருசில நாள்களில் தமி ழகம் திரும்புவார்கள் என இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

