பேருந்தில் மது அருந்திய மாணவ, மாணவிகள்

பேருந்தில் மது அருந்திய மாணவ, மாணவிகள்

1 mins read
170a3b4a-210f-473f-867a-f8e1b001dd23
-

செங்­கல்­பட்டு: தமிழ்­நாட்­டின் செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் ஓடும் பேருந்­தில் பள்ளி மாண­வர்­கள் சிலர் மது அருந்­து­வ­தைக் காட்­டும் காணொளி ஒன்று சமூக ஊட கங்­களில் பரவி வரு­கிறது.

இது­கு­றித்து காவல்­துறை அதி­கா­ரி­களும் மாவட்ட அதி­காரிகளும் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். விசா­ரணை நிறை­வு­பெற்ற பின்­னர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

ஆண்­கள், பெண்­கள் அடங்­கிய அந்த மாண­வர் குழு­வி­னர், மது போத்­த­லைத் திறந்து அருந்து கின்­ற­னர். அந்­தப் பேருந்­தில் மற்ற பய­ணி­களும் இருந்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்­த­வர்­கள் இம்­மா­ண­வர்­கள் என­வும் நம்­பப்­ப­டு­கிறது.

இந்த சம்­ப­வத்தை செங்­கல்­பட்டு மாவட்ட கல்வி அதி­காரி ரோஸ் நிர்­மலா உறுதி செய்­துள்­ளார். "இது பள்­ளிக்கு வெளியே நடந்­த­தால் காவல்­துறை அதி­கா­ரி­கள் இது குறித்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். அது முடிவுற்றதும் உரிய நட­வ­டிக்கை எடுப்­போம்," என்­றார்.