'பொதுமக்களின் தாகத்தை தணித்திடுக'

'பொதுமக்களின் தாகத்தை தணித்திடுக'

2 mins read
5ea64fb9-088a-4b16-9886-377ae7dd6758
கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தைத் தணித்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் ஆங்­காங்கே குடி­நீர்ப் பந்­தல்­களை அமைத்து மக்­க­ளின் தாகத்­தைத் தணிக்க குடி­நீர், மோர் வழங்­குக என்று அதி­முக நிர்­வா­கி­க­ளுக்­கும் தொண்­டர்­க­ளுக்­கும் கட்சி மேலி­டம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

குடீ­நீர்ப் பந்­தல்­கள் சுகா­தா­ர­மான முறை­யில் செயல்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று் தலைமை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக அதி­முக கட்சி யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர் செல்­வமும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் வெளி­யிட்ட கூட்டு அறிக்­கை­யில், "எம்­ஜி­ஆ­ரின் அய­ராத உழைப் பாலும் அவர் அள்ளி, அள்­ளித் தந்த கொடைத் தன்­மை­யி­னா­லும் கோடிக்­க­ணக்­கான கட்­சித் தொண்­டர்­க­ளின் தியா­கத்­தா­லும் தமி­ழக மக்­க­ளின் வேண்­டு­த­லா­லும் உரு­வான இயக்­கம்­தான் அதி­முக," என்று குறிப்­பிட்டு உள்­ள­னர்.

"அவ­ரது மறை­வுக்­குப் பின்­னர் கட்­சியை அல்­லும் பக­லும் அய­ராது பாடு­பட்டு தன்­னையே அர்ப்­ பணித்து ஜெய­ல­லிதா இந்த இயக்­கத்தை வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பல வெற்­றி­க­ளைப் பெற்ற இயக்­க­மாக உரு­வாக்­கிக் காட்­டி­னார்.

"நம் இரு­பெ­ரும் தலை­வர்­க­ளின் பூரண நல்­லா­சி­யோடு அதி­முக தன்­ன­லம் கரு­தா­மல் பொது­ந­லன் ஒன்றை மட்­டுமே குறிக்­கோ­ளா­கக் கொண்டு கட்­சிப் பணி­களை ஆற்று வதி­லும் மக்­கள் பணி­களை மேற்­கொள்­வ­தி­லும் தொடர்ந்து முன்­னிலை வகித்து வரு­வதை பெரு­மை­யோடு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றோம்.

"அதி­முக சார்­பில் ஒவ்­வொர் ஆண்­டும் கோடை காலத்­தில் கட்­சி­யின் பல்­வேறு நிலை­களில் பணி­யாற்றி வரும் நிர்­வா­கி­களும் கட்சித் தொண்­டர்­களும் தாங்­கள் வாழும் பகு­தி­களில் ஆங்­காங்கே குடி­நீர்ப் பந்­தல்­கள், நீர் மோர் பந்­தல்­கள் அமைத்து மக்­க­ளின் தாகத்­தைத் தணிப்­பது வழக்­கம்.

"அதே­போல் இந்த ஆண்­டும் கோடை வெயி­லின் தாக்­கத்­தில் இருந்து மக்­க­ளைக் காக்­கும் பொருட்டு கட்­சி­யின் நிர்­வா­கி­களும் தொண்­டர்­களும் இப்­பொ­ழுதே தாங்­கள் வாழும் பகு­தி­களில் ஆங்­காங்கே குடி­நீர் மற்­றும் நீர் மோர் பந்­தல்­களை உட­ன­டி­யாக அமைத்து மக்­க­ளின் தாகத்­தைத் தணிக்க வேண்­டும் என்று அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றோம்," என்று ஓ.பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் அறிக்கையின் வாயி லாகத் தெரிவித்து உள்ளனர்.