வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளமில்லை: தமிழக அரசு

வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளமில்லை: தமிழக அரசு

2 mins read
f6ad88fe-7010-4418-821d-ec0ce84481b8
-

சென்னை: இம்­மா­தம் 28, 29 தேதி­களில் பணிக்கு வராத தமி­ழக அரசு ஊழி­யர்­க­ளுக்கு ஊதி­யம் இல்லை என்று தலை­மைச் செய­லா­ளர் வெ.இறை­யன்பு அறி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அனைத்துத் துறை செய­லா­ளர்­க­ளுக்­கும் அவர் சுற்­ற­றிக்கை ஒன்றை ­அ­னுப்பி உள்­ளார்.

அதில், வரும் 28 மற்­றும் 29 ஆம் தேதி­களில் பணிக்கு வந்­தோர், வரா­தோர் பட்­டி­யலை துறை­வா­ரி­யாக அனுப்பி வைக்க வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

மேலும் போக்­கு­வ­ரத்து மற்றும் மின்­சா­ரத் துறை­யும் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­டால் ஊதி­யம் கிடை­யாது என அறி­வித்­துள்­ளது.

மார்ச் 28, 29 தேதிகளில் கட்­டா­யம் பணிக்கு வர வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வது, தொழி­லா­ளர் சட்­டத் தொகுப்­பு­களைக் கை வி­டு­வது உள்­ளிட்ட மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­களை கண்­டித்­தும் 14 அம்ச கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தி­யும் மத்­திய அரசு ஊழி­யர்­கள் இம்­மா­தம் 28, 29ஆம் தேதி­களில் நாடு தழு­விய வேலை நிறுத்­தத்­தில் ஈடு­படவுள்­ள­னர்.

இந்­தப் போராட்­டத்­திற்கு தமி­ழ­கத்­தில் உள்ள திமுக உள்­ளிட்ட பெரும்­பா­லான கட்­சி­கள் மற்­றும் தொழிற்­சங்­கங்­கள் ஆத­ரவு அளித்­துள்­ளன.

பெரும்­பா­லான தொழிற்­சங்­கங்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­ப­தால் பொதுப்போக்­கு­வ­ரத்தைப் பாதிக்­கக்­கூ­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

அரசு போக்­கு­வ­ரத்துக் கழக தொழி­லா­ளர்­கள் பெரும்­பா­லும் வேலை நிறுத்­தத்­தில் கலந்து கொள்­வ­தால் பேருந்­து­கள் முழு­மை­யாக இயக்க முடி­யாத நிலை உரு­வாக வாய்ப்பு உள்­ளது. ஆனா­லும் பேருந்­து­களை இயக்க அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

இதற்­கி­டை­யில் வேலை நிறுத்­தம் நடக்­கக்­கூ­டிய 28, 29 ஆகிய நாள்களில் தமி­ழ­கத்­தில் ஆட்­டோக்­கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்­சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.