விருதுநகர்: விருதுநகரில் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று காலை விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்யஉள்ளனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் நால்வர் என எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாழன் மாலை இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட எட்டுப் பேர் மீது ஆறு பிரிவு களின் கீழ் சிபிசிஐடி அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று காலை விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் ராமநாத புரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்புச்சட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் எஸ்.பி. முத்தரசி, டிஎஸ்பிக்கள், ஆய்வாளர் சாவித்திரி ஆகியோர் நேரில் சென்று மனு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தென் மாவட்டங் களைச் சேர்ந்த சிபிசிஐடி காவல்துறையினர் விருதுநகருக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் காப்பகத்தில் சென்று சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று காலை விசாரணை நடத்தினர். கைதானவர்களின் வீடுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்று தடயங்களையும் மற்றும் அங்கு உள்ள பிற ஆவணங்களைக் கைப்பற்றவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தெரி கிறது.

