மின்சார இரு சக்கர வாகனம் வெடித்ததில் தந்தை-மகள் பலி

மின்சார இரு சக்கர வாகனம் வெடித்ததில் தந்தை-மகள் பலி

1 mins read
86aec1b4-4091-4441-9e0b-6a11c450606f
கரும்புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்படும் தந்ைத துரை­வர்மா, மகள் மோக­ன­ பிரீத்­தி­. படங்கள்: தமிழக ஊடகம் -

வேலூர்: மின்­சார இரு­சக்­கர வாக­னத்தை 'சார்­ஜ­ரில்' போட்­டு­விட்டு தூங்­கிக்­கொண்­டி­ருந்த தந்­தை­யும் மகளும் ேநற்று அதி­கா­லை­யில் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் வேலூர் மாவட்­டம், சின்ன அல்­லா­பு­ரம் பகு­தி­யில் நடந்­துள்­ளது.

சிறு­கச் சிறுக காசு ேசர்த்து 'கேபிள் டிவி' பணி­யா­ள­ரான துரை­வர்மா, 49, மூன்று தினங்­க­ளுக்கு முன்­பு­தான் புதி­தாக பேட்­ட­ரி­யில் ஓடும் மின்­சார இரு­சக்­கர வாக­னத்தை வாங்­கி­யுள்­ளார்.

அவ­ரது மனைவி கால­மாகி விட்ட நிலை­யில், தனது வீட்­டின் வெளியே வாகனத்தை சார்ஜரில் போட்­டு­விட்டு, மகள் மோக­ன­பிரீத்­தி­யு­டன், 13, தூங்­கி­யுள்­ளார்.

நேற்று அதி­காலை மூன்று மணி­ய­ள­வில் மின் இணைப்­பில் இருந்த வாக­னம், உயர் மின் அழுத்­தம் கார­ண­மாக திடீ­ரென பயங்­கர சத்­தத்­து­டன் வெடித்ததாகவும் இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகன மும் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப் படுகிறது.

இதனையடுத்து, வீடு முழு­வ­தும் கரும்­புகை சூழ்ந்­ததால் அடுத்து என்ன செய்­வது என்று தெரி­யா­மல் பதற்­றம் அடைந்த துரை வர்மா, தனது மகள் மோகன பிரீத்­தி­யு­டன் வீட்டை விட்டு வெளி­யேற இய­லா­த­தால் கழி­வ­றைக்­குள் சென்று தஞ்­ச­ம­டைந்­தார்.

இருப்­பி­னும், கரும்­புகை நச்­சுப் புகை­யாக மாறி தந்­தை­யும் மகளும் மூச்­சு­விட சிர­மப்­பட்டு கழி­வ­றைக்­குள் மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­த­னர். விசாரணை நடக்கிறது.