கழிவுநீர்த் தொட்டியில் உயிரிழப்பு; ரூ.13 லட்சம் இழப்பீடு

கழிவுநீர்த் தொட்டியில் உயிரிழப்பு; ரூ.13 லட்சம் இழப்பீடு

1 mins read
e410ca01-561a-419b-b3f7-f292a6380447
-

காஞ்­சி­பு­ரம்: காஞ்­சி­பு­ரத்­தில் கழிவு­நீர்த் தொட்­டி­யில் விழுந்து அரசு ஊழி­ய­ரா­கப் பணி­யாற்றி வந்த மாற்­றுத்­தி­ற­னாளி பெண் ஒருவர் உயி­ரி­ழந்­தார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவ­ரது குடும்­பத்­துக்கு ரூ.13 லட்­சம் இழப்­பீடு வழங்க தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் சண்­மு­கம். இவ­ரின் மகள் சரண்யா, 24. மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான இவர், காஞ்­சி­பு­ரத்தை அடுத்த களக்­காட்­டூ­ரில் உள்ள அரசு வேளாண் மையத்­தில் இள­நிலை உத­வி­யா­ள­ராகப் பணி­யாற்றி வந்­தார்.

இந்­நி­லை­யில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்­பர் 7ஆம் தேதி சரண்யா களக்­காட்­டூ­ரில் உள்ள அலு­வ­ல­கத்­திற்­குச் சென்­றுள்­ளார். அந்த மையத்­தில் கழி­வறை வசதி இல்­லா­த­தால், அரு­கில் உள்ள ஒரு வீட்­டுக்­குச் சென்­றார். அப்­போது அங்­கு இன்னும் பாதி கட்­டி­மு­டிக்­கப்­படாத நிலை­யில் இருந்த கழிவுநீர்த் தொட்டி­யின்மீது கால் வைத்தபோது, அதன் ஓடு உடைந்து சரண்யா கழி­வு­நீர்த் தொட்­டி­யில் தவறி விழுந்து இறந்தார்.

இந்த மர­ணம் தொடர்­பாக தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் விசா­ரணை நடை­பெற்று வந்­த ­நி­லை­யில், சரண்­யா­வின் குடும்­பத்­திற்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.