திருச்சி: திருச்சியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெய்யில் சுட்டெரித்து வரும் நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை காலை, மதியம், மாலை என மூவேளையும் குளித்து உடல்சூட்டைத் தணித்து வருகிறது.
அத்துடன், தும்பிக்கை மூலம் லட்சுமி அற்புதமாக 'மவுத் ஆர்கன்' வாசித்தும் மலைக்கோட்டை கோவிலுக்கு வரும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த அழகைப் பலரும் காெணாளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
மலையடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியில் 'ஷவரில்' இருந்து பூப்பூவாய் தண்ணீர் சிதறி விழ, அதில் லட்சுமி ஆனந்தக் குளியலாடி வருவது பக்தர்களைக் கவர்ந்துள்ளது.
தர்பூசணி, திராட்சை, மாதுளை, இளநீர், வெள்ளரிக்காயைச் சாப்பிட்டும் அது தனது உடலை குளிர்ச்சியாக வைத்துள்ளது.

