ரூ.2,600 கோடி முதலீடு; 9,700 வேலைவாய்ப்புகள்

ரூ.2,600 கோடி முதலீடு; 9,700 வேலைவாய்ப்புகள்

2 mins read
8fed29fe-154c-40c6-8b9a-7af2f8232c02
-

சென்னை: துபாய்க்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில், ரூ.2,600 கோடி முத­லீட்­டில் 9,700 பேருக்கு வேலை­வாய்ப்பு வழங்­கும் வகை­யில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­ன­தா­கத் தமி­ழக அரசு தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

துபா­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஐக்­கிய அரபு நாடு­க­ளின் முத­லீட்­டா­ளர் சந்­திப்­பில் முதல்­வர் கலந்­து­கொண்­டார். அவர் முன்­னி­லை­யில் துபா­யைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறு­வ­னம் ரூ.1,000 கோடி முத­லீடு மற்­றும் 1,200 பேருக்கு வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் உற்­பத்­தித் திட்­டத்தை தமி­ழ­கத்­தில் நிறு­வு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

இத்­து­டன், ஆஸ்­டர் டி.எம்.ஹெல்த் கேர் அமைப்பு ரூ.500 கோடி முத­லீட்­டில் 3,500 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் ஒப்­பந்­தம், ஷெராப் குழும நிறு­வ­னம் தமிழ்­நாட்­டில் ரூ.500 கோடி முத­லீடு மற்­றும் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்­கும் வகை­யில் சரக்­குப் போக்­கு­வ­ரத்­துப் பூங்கா அமைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்கை என, மொத்­தம் ரூ.2,600 கோடி முத­லீடு செய்ய துபாய் நிறு­வ­னங்­கள் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ளன. இவற்­றின் மூலம் மொத்­தம் 9,700 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்க வழி ஏற்­பட்­டுள்­ளது.

முத­லீட்­டா­ளர் சந்­திப்­பைத் தொடர்ந்து, இந்­தி­யத் துணைத் தூத­ர­கத்­தின் ஏற்­பாட்­டில் சிறப்பு நிகழ்ச்சி நடை­பெற்­றது. மூவா­யி­ரம் பேர் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்ச்­சி­யில் பேசிய தமி­ழக முதல்­வர், அய­ல­கத் தமி­ழர்­கள் தமிழ்­நாட்­டில் தொழில் தொடங்க முன்­வ­ர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார். தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்­வ­தற்­கான கட்­ட­மைப்­பு­கள் அனைத்­தும் உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

துபாயை வெளி­நா­டாக நினைக்க முடி­யாத வகை­யில் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் நாடாக உள்­ள­தாக முதல்­வர் கூறி­னார். மேலும் உல­க­ள­வில் புகழ்­பெற்ற பல நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் முத­லீ­டு­க­ளைச் செய்­து­வ­ரு­கின்­றன என்­றும் தமிழ்­நாட்­டில் பல்­வேறு துறை­களில் வாய்ப்­பு­கள் கொட்­டிக் கிடக்­கின்­றன என­வும் அவர் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கத்­தில் உள்­கட்­ட­மைப்பு மேம்­பாடு மற்­றும் சொத்­துச் சந்தை வர்த்­த­கத்­துக்கு மிகப்­பெ­ரிய வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன. சுற்­று­லாத் துறை­யி­லும் விருந்­தோம்­பல் துறை­யி­லும் வாய்ப்­பு­கள் கொட்­டிக் கிடக்­கின்­றன.

"தொழில்­பு­ரி­வ­தற்­கும் முத­லீ­டு­கள் மேற்­கொள்­ள­வும் எங்­கள் கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். உல­கத் தரத்­தி­லான உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் மற்­றும் வணி­கச் சூழல் அமைப்­பி­னைத் தொடர்ந்து மேம்­ப­டுத்த முயற்சி செய்­கி­றோம். எல்லா தர வரி­சை­க­ளி­லும் தமி­ழ­கம் முன்­னேறி வரு­கிறது. எங்­கள் வளர்ச்­சி­யில் பங்­கேற்று, நீங்­களும் பயன்­பெற வேண்­டும்," என்று மு.க. ஸ்டா­லின் வேண்­டிக்­கொண்­டார்.

தமது பய­ணத்­தின் அடுத்த கட்­ட­மாக அவர் அபு­தாபி செல்­லத் திட்­ட­மிட்­டுள்­ளார். வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­க­ளின் நலன் காக்க 'புலம்­பெ­யர்ந்த தமி­ழர் நல வாரி­யம்' அமைத்து அதற்­குத் தேவை­யான நிதி வழங்கி உள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு இந்­திய சமூக மற்­றும் கலா­சார மைய­மும் அபு­தா­பி­வாழ் தமிழ்ச் சமூ­க­மும் இணைந்து நன்றி தெரி­விக்­கும் வகை­யில் அபு­தா­பி­யில் மிகப் பெரிய பாராட்டு விழா­வுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன. பின்­னர் துபா­யில் இருந்து இன்று இரவு விமா­னம் மூலம் புறப்­பட்டு சென்­னைக்கு செவ்­வாய்க்­கி­ழமை அதி­கா­லை­யில் வந்து சேரு­கி­றார்.

துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இருதரப்பு வர்த்தக இணக்கம்