கன்னியாகுமரி கடல்மேல் கண்ணாடி பாலம்

கன்னியாகுமரி கடல்மேல் கண்ணாடி பாலம்

2 mins read
1a96d1a6-3e68-42ed-9ad1-ac8f22a4fef0
வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் மூன்றும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையும் திருவள்ளுவர் சிலையும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். படம்: இணையம் -

நாகர்­கோ­வில்: கன்­னி­யா­கு­ம­ரி­யில் அமைந்­தி­ருக்­கும் விவே­கா­னந்­தர் பாறைக்­கும் திரு­வள்­ளு­வர் சிலைக்­கும் இடையே ரூ.37 கோடி செல­வில் கண்­ணாடி இழைத்­தளத்து­டன் பாலம் அமைத்து, ஓராண்­டுக்­குள் அது பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழக அர­சின் பொதுப் பணித்­துறை, நெடுஞ்­சாலை மற்­றும் சிறு துறை­மு­கங்­கள் அமைச்­சர் எ.வ.வேலு இந்­தத் தக­வலை வெளி­யிட்­டார்.

கன்­னி­யா­கு­ம­ரி­யில் கடல் நடுவே அமைந்­துள்ள விவே­கா­னந்­தர் பாறை, 133 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலை ஆகி­யவை சுற்­று­லாப் பய­ணி­க­ளி­டையே மிக­வும் பிர­ப­ல­மா­னவை. இவற்றை மக்­கள் பார்க்க உத­வும் வகை­யில் தமி­ழக அர­சின் பூம்­பு­கார் கப்­பல் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் பட­குச் சேவையை இயக்கி வரு­கிறது. விவே­கா­னந்­தர் பாறைக்கு பெரும்­பா­லும் தடங்­க­லின்றி பட­கு­கள் இயக்­கப்­பட்­டா­லும், கடல் நிலை­யில் ஏற்­படும் மாறு­பா­டு­க­ளால் திரு­வள்­ளு­வர் சிலைக்கு அவ்­வப்­போது பட­குச் சேவை ரத்து செய்­யப்­ப­டு­கிறது. இத­னால் சுற்­று­லாப் பய­ணி­கள் ஏமாற்­றம் அடை­கின்­ற­னர்.

எனவே, திரு­வள்­ளு­வர் சிலைக்­கும் விவே­கா­னந்­தர் பாறைக்­கும் இடையே பொது­மக்­கள் நடந்து சென்று பார்த்து மகி­ழும் வகை­யில் கண்­ணா­டித் தளத்­து­டன் இணைப்­புப் பாலம் அமைக்­கப்­பட உள்­ளது. இணைப்­புப் பாலம் அமைய உள்ள பகு­தியை அமைச்­சர் எ.வ.வேலு நேற்று பார்­வை­யிட்­டார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "விவே­கா­னந்­தர் பாறைக்­கும் திரு­வள்­ளு­வர் சிலைக்­கும் இடையே 72 மீட்­டர் நீளம், 10 மீட்­டர் அக­லத்­தில் பாலம் அமைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பாலத்­தின் மீது சுற்­று­லாப் பய­ணி­கள் செல்­லும்­போது முக்­க­ட­லின் அழ­கைப் பார்த்து ரசிக்­க­வும், கட­லின் சீற்­றத்­தால் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யி­லும் கடி­னத் தன்மை கொண்ட கண்­ணாடி இழை அமைக்க ஏலக்­குத்­த­கைக்கு அழைப்பு விடப்­பட்­டுள்­ளது.

"ஓராண்­டுக்­குள் பாலத்­துக்­கான பணி­கள் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்­றார் அவர். இரவு நேரத்­தி­லும் கண்­டு­க­ளிக்க ஏது­வாக மின்­னொ­ளிக்கு ஏற்­பாடு செய்­யப்­படும்.

ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய 25 லட்­சம் சுற்­று­லாப் பய­ணி­கள் அங்கு வந்­து­செல்­வது வழக்­கம் என்று சுற்­று­லாத் துறைத் தக­வல்­கள் குறிப்பி­டு­கின்­றன.