தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தூய்மை இந்தியா திட்டம்: தமிழகம் இரண்டாமிடம்

1 mins read
9f324229-e1f8-4224-a47f-99df68be2244
-

சென்னை: இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் தூய்மை இந்­தியா திட்­டத்­தின்­கீழ், தற்­போது நாடு­மு­ழு­வ­தும் 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள், திறந்­த­வெ­ளிக் கழிப்­பி­டம் இல்­லா­த­வை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளன.

இத்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் 13,960 கிரா­மங்­களை திறந்­த­வெ­ளிக் கழிப்­பி­டம் இல்­லாத கிரா­மங்­க­ளாக மாற்றி, தெலுங்­கானா மாநி­லம் முத­லி­டத்­தில் உள்­ளது.

11,477 கிரா­மங்­களை திறந்­த­வெ­ளிக் கழிப்­பி­டம் இல்­லா­த­வை­யாக மாற்­றிய தமி­ழ­கம் இரண்­டாம் இடத்­தில் உள்­ளது.

இந்த கிரா­மங்­களில் சாண எரி­வாயு உள்­ளிட்ட கழிவு மேலாண்மை திட்­டங்­கள், சமை­ய­லறை மற்­றும் சலவை நிலைய கழி­வு­நீர் மேலாண்மை, பிளாஸ்­டிக் கழிவு மேலாண்மை, மனி­தக் கழிவு மேலாண்மை போன்ற திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தூய்மை இந்­தியா இயக்­கம் 2.0 திட்­டத்­துக்­காக ரூ.1 லட்­சத்து 40 ஆயி­ரத்து 881 கோடி ஒதுக்­கப்­பட்டு, கிரா­மங்­களில் பாது­காக்­கப்­பட்ட குடி­நீர், சுற்­றுப்­புற சுகா­தா­ரப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று இந்­தி­யா­வின் மத்­திய குடி­நீர், சுற்­றுப்­புற சுகா­தா­ரத் துறை செய­லர் வினி மகா­ஜன் குறிப்பிட்டார்.