சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தைக் குறைகூறி அவதூறு பரப்பியதற்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று திமுக சார்பில் கோரப்பட்டுள்ளது.
முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு நாள்களில் இந்தத் தொகையை வழங்கத் தவறினால், வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "திமுகவின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்," என்றார்.

