வேலைநிறுத்தம்: அத்தியாவசியச் சேவைகள் தடைபடா

வேலைநிறுத்தம்: அத்தியாவசியச் சேவைகள் தடைபடா

1 mins read
a8f431d2-6ca4-48ac-be97-1fb845d00764
-

சென்னை: மத்­திய தொழிற்­சங்­கங்­கள் சார்­பில் இன்­றும் நாளை­யும் நடை­பெ­ற­வுள்ள பொது வேலை­நிறுத்­தத்­தால் தமி­ழ­கத்­தில் அத்­தி­யா­வ­சி­யச் சேவை­கள் தடை­ப­டா­மல் இருக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கப் பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

பெட்­ரோ­லி­யப் பொருள்­க­ளின் விலை உயர்வு, அர­சாங்க நிறு­வ­னங்­க­ளைத் தனி­யார்­ம­யப்படுத்­து­தல் ஆகி­ய­வற்றை எதிர்த்து நாடு தழு­விய இரண்டு நாள் வேலை நிறுத்­தத்­துக்கு மத்­திய தொழிற்­சங்­கங்­கள் அழைப்­பு­வி­டுத்­துள்­ளன. இத­னால் பொதுப் போக்­கு­வ­ரத்து, மின் விநி­யோ­கம் போன்ற அத்­தி­யா­வ­சி­யச் சேவை­கள் பாதிக்­கப்­படக்­கூ­டும் என்ற கவலை எழுந்­துள்­ளது.

ஆனால் பேருந்து, ரயில் சேவை­கள் பாதிக்­கப்­ப­ட­மாட்டா என்­றும் மின்­வி­நி­யோ­கம் தடை­ப­டாது என்­றும் அதற்­குத் தகுந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மறி­யல்­கள், ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெ­றக்­கூ­டும் என்­ப­தால் இரண்டு நாளும் தமி­ழ­கம் முழு­வ­தும் கிட்­டத்­தட்ட ஒரு லட்­சம் காவல்­துறையினர் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் தெரிவிக்கப்­பட்­டது.