சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியாலும் உணவுப் பொருள்களின் மிதமிஞ்சிய விலை ஏற்றத்தாலும் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டுள்ளனர். படகு மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வரக் கூடும் என்பதால் இந்திய கடற்
படையின் ஹோவர் கிராஃப்ட் ரோந்துப் படகு மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவு, தங்கம், எரிபொருள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள்
கண்காணித்து வருகிறார்கள்.

