தாயைக் கொன்றவனுக்கு 40 ஆண்டு சிறை

தாயைக் கொன்றவனுக்கு 40 ஆண்டு சிறை

1 mins read
c89e9dae-69f2-41f7-bc4a-4c7eaaf95a98
-

புதுக்­கோட்டை: பெற்ற தாயை மண்­ணெண்­ணெய் ஊற்றி எரித்­துக் கொன்ற ஆட­வ­ருக்கு நேற்று புதுக்­கோட்டை முதன்மை நீதி­மன்­றம் 40 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்­தது.

புதுக்­கோட்டை மாவட்­டம் மரு­தந்­தலை கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் சந்­தோஷ்­கு­மார், 26. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தமது தாய் லீலாவதியை (வயது 55) மண்­ணெண்­ணெய் ஊற்றி எரித்து கொலை செய்­தார்.

இந்­தச் சம்­ப­வம் அப்­ப­கு­தி­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சந்­தோஷ் குமாரை கைது செய்த காவல்­து­றை­யி­னர், புதுக்­கோட்டை மாவட்ட முதன்மை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர். இந்த வழக்கு தொடர்­பான விசா­ரணை தொடர்ந்து நடை­பெற்று வந்­தது.

இந்நிலை­யில், இந்த வழக்கு நேற்று மீண்­டும் நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, குடிக்க பணம் கொடுக்க மறுத்த கார­ணத்­துக்­காக, பெற்ற தாயைக் கொன்ற மகன் சந்­தோஷ்குமா­ருக்கு 40 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்து நீதி­பதி அதி­ரடி தீர்­ப்ப­ளித்­தார்.

மேலும், தமது தவற்றை உணர்­ வ­தற்­காக மூன்று மாதம் அவரை தனி­மைச் சிறை­யில் அடைக்­க­வும் நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.